close
Choose your channels

3 வயது குழந்தைக்கு மது கொடுத்துவிட்டு கல்லூரி மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த பெண்: அதிர்ச்சி தகவல்

Tuesday, January 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கல்லூரி மாணவர்கள் மூவருடன் உல்லாசமாக இருந்து பெண்மணி ஒருவர் தனது குழந்தை அழுது தொல்லை கொடுத்ததால் அந்த குழந்தைக்கு மது கொடுத்த ஈவிரக்கமற்ற பெண்ணின் செயல் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாகலூர் ஜீவா நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் நந்தினி. இவருக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து 3 வயது குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் அசோகன் என்பவருடன் நந்தினிக்கு கள்ளக்காதல் இருந்ததாகவும், அதுமட்டுமின்றி பக்கத்து வீட்டில் இருந்த கல்லூரி மாணவர்களுடன் அவ்வப்போது அவர் உறவு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நந்தினியின் வீட்டில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது கல்லூரி மாணவர்களுடன் மதுபோதைய்யில் நந்தினி உல்லாசமாக இருந்ததும், அருகில் குழந்தை கதறி அழுதுகொண்டே இருந்ததையும் பார்த்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது குழந்தைக்கும் மது கொடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துனர்.

இதனை அடுத்து நடந்த விசாரணையில் கல்லூரி மாணவர்களுடன் நந்தினி மது அருந்தி உல்லாசமாக இருக்கும்போது குழந்தை அழுததால் குழந்தையின் அழுகையை அடக்க நந்தினி குழந்தைக்கு மது கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.