கணவரின் முதல் மனைவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய 2வது மனைவி கைது!
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் அவருக்கு சுபாஷினி என்ற 39 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்
இந்த நிலையில் தனது கணவருக்கு இரண்டாவது திருமணம் நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த முதல் மனைவி, இரண்டாவது மனைவியுடன் சண்டை போட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி முதல் மனைவியின் மொபைல் போனுக்கு ஆபாச படங்களையும் ஆபாச வீடியோக்களையும் அனுப்பியதாக தெரிகிறது
தனது மொபைல் போனுக்கு தொடர்ச்சியாக ஆபாச படங்கள் வந்ததால் அதிர்ச்சி அடைந்த முதல் மனைவி போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் அவரது மொபைல் போனை ஆய்வு செய்த போது, அந்த படங்கள் அனைத்தும் அவருடைய கணவரின் இரண்டாவது மனைவி சுபாஷினியின் மொபைல் போனில் இருந்து வந்ததை கண்டு பிடித்தனர் இதனையடுத்து சுபாஷினியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடைய மொபைல் போன் நம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது