பார்வையற்ற முதியவருக்கு பெண் செய்த உதவி: உலகம் முழுவதும் வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Thursday,July 09 2020]

பார்வையற்ற முதியவர் ஒருவரை பேருந்தில் ஏற்றிவிட பெண் ஒருவர் அங்குமிங்கும் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ஒரு நாள் முழுவதும் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது என்பது குறிப்பிடப்பட்டது

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பார்வையற்ற முதியவர் ஒருவர் பேருந்தில் ஒன்றை பிடிப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பேருந்து கிளம்ப ஆரம்பித்தது. இதை பார்த்த அங்கிருந்த நடுத்தர வயது பெண் ஒருவர், ஓடிச்சென்று பேருந்து நடத்துநரிடம் பார்வையற்ற முதியவர் ஒருவர் வந்து கொண்டிருக்கிறார். தயவுசெய்து பேருந்தை நிறுத்துங்கள் என்று கூறுகின்றார்.இதையடுத்து அந்த பேருந்து நிறுத்தப்பட்டது 

பின்னர் அந்த பெண் மீண்டும் முதியவரிடத்தில் ஓடிச் சென்று அவருடைய கையைப் பிடித்து வந்து பேருந்தில் ஏற்றி விடுகிறார். நடத்துனரும் அந்த முதியவரை பேருந்தில் ஏற்றி பாதுகாப்பான இடத்தில் உட்கார வைக்கிறார். அதன்பின் பேருந்தில் முதியவர் ஏறி உட்கார்ந்து விட்டதை உறுதி செய்தபின் அந்த பெண் மீண்டும் தன்னுடைய வேலையை பார்க்கச் செல்கிறார்

41 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவை நேற்று கேரளாவை சேர்ந்த நெட்டிசன் ஒருவரால் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டது. அதன் முன் இந்தியா முழுவதும் வைரலானது. ஒரு சில மணி நேரங்களில் உலகம் முழுவதும் இந்த வீடியோ டிரெண்ட் ஆனது. இந்த வீடியோவில் இருக்கும் முகம் தெரியாத, பெயர் தெரியாத பெண்ணுக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்

More News

வேறு எந்த நோயும் இல்லை: கொரோனாவால் மட்டும் உயிரிழந்த சென்னை இளம்பெண்

சென்னையைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் வேறெந்த இணை நோயும் இல்லாமல் கொரோனா தாக்கத்தால் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரே உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மீண்டும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே அவ்வப்போது தனது சமூக வலைதளத்திலும் தனது அதிகாரபூர்வ இணையதளத்திலும் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி

ஜூலை 27ம் தேதி 12ம் வகுப்பு பொது தேர்வு: தமிழக அரசு அறிவிப்பு

12ம் வகுப்பு பொது தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ம் தேதி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சத்தியமா நான் எரிக்கல: திருச்சி சிறுமி எரிப்பு வழக்கில் கைதான இளைஞர் வாக்குமூலம்

திருச்சி மாவட்டம் அதவத்தூர் பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காட்டு பகுதியில் திடீரென எரிந்த நிலையில் மரணம் அடைந்தார்

திருமணம் குறித்து சர்ச்சை கருத்து: பெண் மீது புகார் அளித்த வனிதா!

தன்னைப் பற்றியும் தனது திருமணம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசும் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனிதா விஜயகுமார் காவல் துறையில் புகார் அளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது