close
Choose your channels

காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளம்பெண்

Friday, December 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காதலித்து கர்ப்பமாக்கி விட்டு அதன் பின்னர் திருமணம் செய்ய மறுத்த வாலிபர் ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்த பெண்ணால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த புவனேஸ்வர் என்ற பகுதியில் மாராண்டி என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் அவருக்கு பணி மாறுதல் ஏற்பட்டதால் வேறு ஒரு பகுதியில் அவர் தனியாக தங்கி இருந்தார். அந்த பகுதியில் அவருக்கு ஒரு இளம் பெண் மீது காதல் ஏற்பட்டது. திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்த அந்த வாலிபர் அந்த பெண்ணை காதலித்தது மட்டுமன்றி கர்ப்பமும் ஆக்கியுள்ளார்.

இந்த நிலையில் குழந்தை பிறந்த உடன் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் வற்புறுத்தியபோதெல்லாம் திருமண பேச்சை திசை திருப்பிவிட்ட்டு அவர் காலம் கடத்தியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் அந்த பெண் தனது காதலருக்கு திருமணமாகி விட்டது என்பதும் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

இதனால் தன்னை ஏமாற்றி விட்டதாக கருதிய அந்த பெண், ஒரு நாள் மாராண்டி வீட்டிற்கு வந்தபோது திடீரென கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார். சம்பவ இடத்திலேயே மாராண்டி மரணம் அடைந்ததாகவும் இதனை அடுத்து அந்த பெண்போலீசில் சரண் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. காதலித்து ஏமாற்றி அமட்டுமின்றி கர்ப்பமாக்கிய வாலிபர் ஒருவரை இளம்பெண் ஒருவர் கொலை செய்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.