ரெயில்வே டிராக்கில் அன்னை இறந்தது தெரியாமல் பால் குடிக்கும் குழந்தை: அதிர்ச்சி புகைப்படம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீகாரில் ரயில்வே நிலையம் ஒன்றில் அன்னை இறந்தது கூட தெரியாமல் அவரை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்ட குழந்தை ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் ரயிலில் இருந்து கீழே விழுந்த அன்னை இறந்தது கூட தெரியாமல் அவரிடம் பால் குடிக்க முயற்சிக்கும் குழந்தை ஒன்றின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இளம் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் ரயிலில் சென்றுக் கொண்டிருந்தார். அவர் எதிர்பாராத வகையில் தனது குழந்தையுடன் ரயிலில் இருந்து கீழே விழுந்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த போதிலும் தனது மகனுக்கு அவர் பிஸ்கட் பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து கொடுத்து சாப்பிட கூறியதாகவும், தாய்ப்பால் கொடுக்க முயற்சித்தாகவும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்.

இந்த நிலையில் அதன் பின் அவர் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். ஆனால் அன்னை இறந்தது கூட தெரியாமல் அவரது மார்பில் பால் குடிக்க முயற்சித்த குழந்தையின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து ரயில்வே அதிகாரிகள் அந்த பெண்ணின் உடலை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

இந்த சம்பவத்தில் அந்த பெண் இறந்ததை விட ஒரு மிகப்பெரிய கொடுமை என்னவெனில் கீழே விழுந்ததால் காயமடைந்த குழந்தையை அரசு மருத்துவமனையில் சேர்க்க மருத்துவமனை ஊழியர்கள் மறுத்துள்ளனர். காரணம் அந்த குழந்தை அட்மிஷன் கட்டணமாக ரூபாய்.10 செலுத்தவில்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறினார்களாம். தாயை இழந்து தவிக்கும் பச்சிளங்குழந்தையிடம் கூட மனிதத் தன்மையே இல்லாமல் 10 ரூபாய் அட்மிஷன் கட்டணம் கேட்ட மருத்துவமனை ஊழியர்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன

More News

3000ஐ தாண்டிய ராயபுரம், 2000ஐ தாண்டிய 3 மண்டலங்கள்: சென்னை தாங்குமா?

சென்னையில் கடந்த 4 நாட்களுக்காக கொரோனாவின் பாதிப்பு தினமும் 1000க்கும் மேல்அதிகரித்து கொண்டே வருவதால் சென்னையில் கொரோனா பரவுதலை தடுக்க சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி

தற்கொலைக்காக விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி, திடீரென அலறியதால் பரபரப்பு

தற்கொலை செய்துகொள்வதற்காக லாட்ஜில் ரூம் போட்டு விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி திடீரென உயிர் பயம் வந்து அலறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

மின்கட்டணம் குறித்து கேள்வி எழுப்பிய பிரசன்னாவை பழிவாங்குவதா? முக ஸ்டாலின்

நடிகர் பிரசன்னா சமிபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் மின்வாரியம் குறித்து பதிவு செய்த ஒரு டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த

கொரோனா நேரத்தில் ஏழை மக்களுக்கு உதவிய சலூன் கடைக்காரர் மகள் ஐ.நா. வின் நல்லெண்ணத் தூதராக தேர்வு!!!

மதுரை மேலமடையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் இவர் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

400 பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பும் பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட்!!!

கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்ட நிலையில் பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட் தனது 400 பணியாளர்களை வெளியேற்றும் முடிவினை எடுத்து இருக்கிறது.