கொரோனா நிதியாக 2 பவுன் தங்கச்சங்கிலி கொடுத்து முதல்வருக்கு நெகிழ்ச்சியான கடிதம் எழுதிய பெண்!

  • IndiaGlitz, [Sunday,June 13 2021]

கொரோனா நிதியாக தனது திருமணத்திற்கு வைத்திருந்த இரண்டு பவுன் தங்கச்சங்கிலியை கொடுத்துவிட்டு நெகிழ்ச்சியான கடிதம் எழுதிய பெண் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: தனது தந்தை ஓய்வு பெற்றவர் என்றும் அவருக்கு மூன்று பெண்களில் இருக்கிறோம் என்றும் மூன்று பேரும் பட்டதாரியாக இருந்தும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தனது தந்தை பணி ஓய்வு பெறுவதற்கு முன்பே தனது இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் ஆகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பணி ஓய்வு பெற்ற பின் தனது அம்மாவுக்கு உடல் நலக் குறைவு காரணமாக சுமார் 13 லட்சம் செலவு செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும் தந்தையின் பணி ஓய்வுக்குப் பின் கிடைத்த பணம் முழுவதும் அம்மாவின் மருத்துவச் செலவு ஆகி விட்டதால் தற்போது அவருக்கு வரும் ஓய்வூதிய தொகை ரூ.7000 வைத்து தானும் தனது தந்தையும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அதில் ரூபாய் 3000 வீட்டு வாடகைக்கு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்

தன்னுடைய திருமணமான சகோதரரிகள் தங்களுக்கு உதவி செய்கிற வாய்ப்பு இல்லை என்றும் அதனால் மிகுந்த சிரமப்பட்டு வருவதாகவும் இதனை அடுத்து தன்னுடைய தகுதிக்குத் தக்கவாறு ஒரு வேலை கிடைத்தால் நன்றியுடன் இருப்பேன் என்றும் கூறியுள்ளார். தனக்கு அரசு வேலை வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை என்றும் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைத்தால் கூட போதும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த கடிதத்தை படித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால் விரைவில் அந்த பெண்ணுக்கு நல்ல வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

3 தனித்தனி புகார்கள் எதிரொலி: சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு!

சென்னை அருகே சர்வதேச பள்ளி ஒன்றை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நாளை முதல் டீக்கடைகள் திறக்க அனுமதி: மேலும் சில தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 21-ஆம் தேதி வரை நீடிப்பதாக அறிவித்தார்.

சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் போலீசார் வேண்டாம்: டிஜிபியின் உத்தரவுக்கு 'மாநாடு' தயாரிப்பாளர் நன்றி!

சாலை பாதுகாப்பு பணிகளில் இனி பெண் போலீசாரை ஈடுபடுத்த வேண்டாம் என டிஜிபி திரிபாதி அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜிவி பிரகாஷ்!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர், இசையமைப்பாளர், பாடகர் ஜிவி பிரகாஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள்,

மன்னிப்பை ஏற்க முடியாது, புகார் அளிக்க போவது உறுதி: பாடகி சின்மயி திட்டவட்டம்

தற்போது மிக வேகமாக பரவி வரும் கிளப் ஹவுஸ் என்ற குரல் வழி பேசும் சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மருத்துவர் ஒருவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாக