close
Choose your channels

50 ஆண்களை ஏமாற்றிய திருமண ராணி.. அதிர்ச்சியில் 51வது கணவர்!

Monday, January 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கீழக்கரையை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி 50 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளதை அடுத்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கீழக்கரை பகுதியை சேர்ந்த முத்துராமு என்பவர் சின்னதிருப்பதி என்ற பகுதியை சேர்ந்த நசீனா சபீபா பர்வீன் என்ற பெண்ணை முகநூல் மூலம் காதலித்து கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமண செலவிற்காக நசீனாவுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் கார் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும் வாங்கி வந்ததாகவும் தெரிகிறது. மேலும் தனது மனைவிக்கு 37 பவுன் நகைகளையும் வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் புதிதாக தொழில் தொடங்க 10 லட்ச ரூபாயும் வழங்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில் தற்செயலாக முத்துராமு தனது மனைவியின் செல்போனை பார்த்த போது அதில் பல ஆண்களுடன் அவர் நெருக்கமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது மனைவி ஏற்கனவே 50 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அது தனது தனிப்பட்ட விவகாரம் என்று கூறியுள்ளதால் அதிர்ச்சி அடைந்தார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்தது.

இதனை அடுத்து தான் திருமணத்திற்கு செலவழித்த 20 லட்ச ரூபாய் மற்றும் 37 பவுன் தங்க நகையை திருப்பி தரும்படி நசீனாவிடம் கேட்க அவர் மறுத்துள்ளார். இதனையடுத்து முத்துராமு காவல் நிலையத்தில் தனது மனைவி மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ள நிலையில் இதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

50 ஆண்களை ஏமாற்றிய பெண்ணை திருமணம் செய்துகொண்ட முத்துராமு தற்போது அதிர்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.