close
Choose your channels

கணவருடன் கோபித்து காணாமல் போன இளம்பெண்ணை தேடும் போலீஸார்

Thursday, March 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கணவருடன் சண்டை போட்டு கோபித்துக்கொண்டு காணாமல் போன சென்னையை சேர்ந்த இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்

சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி அம்பிகா. இவர்கள் இருவருக்கும் கடந்த 6 வருடங்களுகு முன் திருமணம் ஆகி உள்ளது என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்ததாக தெரிகிறது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதி விஜயகுமாருக்கும் அம்பிகாவுக்கு ஏற்பட்ட சண்டையின் காரணமாக அம்பிகா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. அவர் நீண்ட நேரமாக வீட்டிற்கு திரும்பாததால் அவரது கணவர் விஜயகுமார் போலீசில் புகார் கொடுத்துள்ளார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அம்பிகாவை தேடி வருகின்றனர்

மேலும் அமெரிக்காவின் செல்போனை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது. இந்த நிலையில் அம்பிகாவின் சகோதரர் சரவணன் என்பவர் தனது தங்கையை கடந்த 3 நாட்களாக காணவில்லை என்றும் தனது தங்கை குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தனக்கு தகவல் தெரிவிக்கவும் என்றும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.