close
Choose your channels

பைக்கில் ஒன்றாக ஊர் சுற்றிய காதலனை பின்னால் இருந்தே கத்தியால் குத்திய காதலி… அதிர்ச்சி சம்பவம்!!!

Wednesday, January 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆந்திர மாநிலத்தில் காதலுடன் பைக்கில் சென்ற காதலி ஒருவர் பின்னால் இருந்தே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த மலச்சம்பள்ளி எனும் பகுதியில் வசித்து வரும் பவானி என்ற இளம் பெண்ணும் தாலிப்புடி எனும் பகுதியில் வசித்து வரும் தத்தாஜி என்ற இளைஞரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தத்தாஜி தனது காதலியை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்துள்ளார். இத்திருமணத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் பவானியிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் ரகசிய திருமணத்தில் விருப்பம் இல்லாத பவானி தன்னை ஊர் அறிய திருமணம் செய்து கொள்ளமாறு பலமுறை வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் இந்த கோரிக்கைக்கு தத்தாஜி சிறிதும் செவிக் கொடுக்காமல் இருந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த பவானி நேற்று ஊர் சுற்றலாம் என தன்னுடைய ஊருக்கே தத்தாஜியை வரவழைத்து இருக்கிறார். நேற்று காலை முதல் மாலை வரை பல்வேறு இடங்களுக்கு ஊர்ச் சுற்றிய இந்த ஜோடி இறுதியில் பவானி வீட்டை நோக்கி சென்றிருக்கிறது. இந்நிலையில் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்த தத்தாஜியை பவானி பின்னால் இருந்து திடீரென்று கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து தத்தாஜி உயிரிழந்து உள்ளார்.

பின்னர் பவானி தத்தாஜியின் தாயாருக்கு செல்போனில் அழைத்து உங்களது மகனை கொன்று விட்டேன். வந்து உடலை எடுத்துச் செல்லுங்கள் என ஆத்திரமாகக் கூறியதாகவும் செய்தி தெரிவிக்கிறது. இந்நிலையில் ஊர் அறிய திருமணம் செய்ய வேண்டும் என நினைத்த பெண் இளைஞனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.