பூமியில் கிடைக்காத ஒரு பொருளை பரிசாகக் கொடுத்த கணவன்… நெகிழ்ச்சி சம்பவம்!!!

  • IndiaGlitz, [Monday,December 28 2020]

 

பூமியில் இல்லாத ஒரு பொருள் என்றால் அதற்காக விண்வெளிக்குத்தான் போக வேண்டும். ஆம் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு அன்பு கணவன் சொந்தமாக நிலவில் நிலத்தை வாங்கி தனது மனைவிக்கு அதை பரிசாகக் கொடுத்து அசத்தி இருக்கிறார். இச்சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆஜ்மீர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மேந்திரா- சப்னா தம்பதி. இத்தம்பதி சமீபத்தில் தங்களுடைய 8 ஆவது திருமண நாளைக் கொண்டாடி இருக்கின்றனர். இத்தினத்தில் தர்மேந்திரா கொடுத்த ஒரு பரிசுதான் இந்தியாவில் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. சப்னாவிற்கு ஒரு பெரிய சர்பரைஸ் கொடுக்க வேண்டும் என நினைத்த தர்மேந்திரா அமெரிக்காவில் உள்ள லூனா சொஸைட்டி எனும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இருக்கிறார்.

இந்நிறுவனம் நிலவில் இருக்கும் நிலத்தை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்திடம் 3 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி இருககிறார் தர்மேந்திரா. மேலும் அதற்கான உரிமத்தை, ஒரு வருடமாக காத்திருந்து பெற்ற தர்மேந்திரா தனது 8 ஆவது திருமண நாளன்று மனைவி சப்னாவிற்கு பரிசாகக் கொடுத்து இருக்கிறார். இந்தப் பரிசைப் பார்த்து வியந்து போன சப்னா மகிழ்ச்சியில் துள்ளி குதித்து இருக்கிறார்.

ஜீன்ஸ் படத்தின் நாயகி ஜஸ்வர்யா ராய்க்காக கவிஞர் வைரமுத்து, “அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி நிலவில் உனக்கொரு வீடு செய்வேன்” என்று எழுதி இருப்பார். அதுவும் திரையில்தான். ஆனால் நிஜத்தில் ஒரு எளிமையான கணவன் தன்னுடைய மனைவிக்கு நிலவில் 3 ஏக்கர் நிலத்தை சொந்தமாக வாங்கி பரிசளித்து இருக்கிறார். இச்சம்பவம் கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அவர், நடிகர் ஷாருக்கானுக்கு அவருடைய பெண் ரசிகர் ஒருவர் நிலவில் நிலத்தை வாங்கி பரிசளித்தாராம். அதேபோல தனது மனைவிக்கும் பரிசளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். நிலாவில் உள்ள நிலத்தை விற்பனை செய்யும் லூனா சொஸைட்டி நிறுவனம் இந்திய மதிப்பில் ஒரு ஏக்கர் நிலத்தை ரூ.2,500 க்கு விற்பனை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பு: திரையுலகினர் இரங்கல்!

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 

ஆறடியில் ஒரு கேக் சிலை… மரடோனாவை கவுரவித்த தமிழர்!!!

மறைந்த கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பேக்கரி கடைக்காரர் ஆறடியில் கேக் சிலையை வடிவமைத்து உள்ளார்.

'மாஸ்டர்' ரிலீஸ் எப்போது? திருப்பூர் சுப்பிரமணியம் தகவல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிறப்பு முதல் இறப்பு வரை, எந்தெந்த சேவைக்கு எவ்வளவு லஞ்சம்: பட்டியலிட்ட கமல்ஹாசன்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

கிடைக்குற கேப்பெல்லாம் யூஸ் பண்றாரே: ஆரியை கட்டம் கட்டிய ஷிவானி, ரம்யா!

பிக்பாஸ் வீட்டில் ஆரியை எதிர்த்து சண்டை போட்டவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் வீட்டுக்குள் தற்போது இருக்கும் போட்டியாளர்கள் ஆரி குறித்து கொஞ்சம்