சிவகார்த்திகேயன் என்ன ஸ்பெஷலா? தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் ஓட்டு போட சென்றபோது, சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றும் அவரது மனைவி பெயர் மட்டுமே இருப்பதாகவும், அதனால் அவரது மனைவியை மட்டுமே ஓட்டு போட அனுமதிக்க முடியும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த சிவகார்த்திகேயன் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். இந்த செய்தி மேலிடம் வரை பரவியதும் சிவகார்த்திகேயனுக்கு சேலஞ்ச் ஓட்டு போட தேர்தல் அதிகாரிகள் அனுமதித்தனர். இந்த செய்தி தமிழகம் முழுவதும் வேகமாக பரவியது.

இந்த நிலையில் இதேபோல் அறந்தாங்கி அருகே எருக்கலகோட்டை என்ற வாக்குச்சாவடியில் தேன்மொழி என்ற பெண் ஓட்டு போட வந்தபோது வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லாததால் தேர்தல் அதிகாரிகள் அவரை ஓட்டு போட அனுமதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழி எவ்வளவோ சொல்லி பார்த்தும் அதிகாரிகள் கேட்கவில்லை. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த தேன்மொழி, 'சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதபோது அவரை மட்டும் ஓட்டு போட எப்படி அனுமதித்தீர்கள். சிவகார்த்திகேயன் என்ன ஸ்பெஷலா? நடிகர் என்பதால் அவருக்கு சலுகையா? சிவகார்த்திகேயனுக்கு ஓட்டு போட அனுமதி அளித்தது போல் என்னையும் அனுமதிக்க வேண்டும், அல்லது சிவகார்த்திகேயனை ஓட்டு போட அனுமதித்து தவறு என தேர்தல் அதிகாரிகள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமின்றி ஓட்டுச்சாவடி அருகே தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் அறந்தாங்கி காவல் துணை காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தேன்மொழியுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்தே தர்ணாவை தேன்மொழி கை விட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பாக இருந்தது.

More News

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: அதிர்ச்சியில் சென்னை பெண் மரணம்

இந்த தேர்தல் மட்டுமின்றி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் ஒருசிலரால் ஓட்டு போட முடியாத நிலை இருந்து வருகிறது.

ஓட்டு போட முடியாத சிவகார்த்திகேயன்!

ஒவ்வொரு வாக்காளரும் தவறாமல் ஓட்டு போட வேண்டும் என்று வலியுறுத்தும் தேர்தல் ஆணையம் தனது கடமையை சரியாக செய்துள்ளதா? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது

அரசாங்கம் இதுக்கு ஒரு பதில் சொல்லியே ஆகவேண்டும்: ஓட்டு இல்லாத நடிகர் ஆவேசம்

பிரபல காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா இன்று தனது ஜனநாயக கடமையான ஓட்டு போடுவதற்காக காலை  ஆறு மணி முதல் வரிசையில் நின்றுள்ளார்.

விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது ஜெட் ஏர்வேஸ் 

இந்தியாவின் தனியார் விமான நிறுவனங்களில் ஒன்றான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை நேற்று இரவுடன் தற்காலிகமாக நிறுத்தி கொண்டது.

வரிசையில் நின்று வாக்களித்த சூர்யா, கார்த்தி, ஜோதிகா!

தமிழகத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்