close
Choose your channels

ஒரு சண்டை கூட போடவில்லை: விவாகரத்துக்கு மனைவி கூறிய அதிர்ச்சி காரணம்

Sunday, August 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருமணமான 18 மாதங்களில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் தனது கணவர் இந்த ஒன்றரை வருடங்களில் தன்னிடம் ஒரு சண்டை கூட போடவில்லை என்ற காரணத்தைக் கூறி இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சாம்பல் என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவரது கணவர் அவர் மீது மிகவும் அன்பாக இருப்பார் என்றும் சமையல் உள்ளிட்ட வேலைகளுக்கு கூட அவர் உதவி செய்வார் என்றும் தெரிகிறது. மேலும் அந்தப் பெண் என்ன தவறு செய்தாலும் அவரது கணவர் அவரை திட்ட மாட்டாராம், எல்லா தவறுகளையும் மன்னித்து அவரை அன்புடன் கவனித்துக் கொண்டதாகவும் தெரிகிறது.

கணவரின் அதீத அன்பு அந்த பெண்ணுக்கு அலுப்பு தட்டியது. இதையே காரணமாகக் கூறி தனக்கு விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதில் ஒரு பெரிய பியூட்டி என்னவென்றால் இந்த விவாகரத்துக்கும் அவரது கணவர் எதிர்ப்பு தெரிவிக்காமல் சம்மதம் தெரிவித்துள்ளார் என்பது தான். ஆனால் நீதிமன்றத்தில் அந்தப் பெண்ணின் மனுவை நீதிபதி நிராகரித்தார். அந்த பெண் கூறும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.

மேலும் அவர் நீதிமன்றத்தை அடுத்து உள்ளூர் பஞ்சாயத்தில் இந்த பிரச்சனையை கொண்டு சென்றதாகவும், அங்கும் பஞ்சாயத்தார் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டனர் என்றும் கூறப்படுகிறது. ஓவர் அன்பு காரணமாக ஒரு பெண் விவாகரத்து கேட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.