close
Choose your channels

மனைவியோடு சேர்ந்து கொண்டு பெற்றத் தாயையே தீ வைத்து கொளுத்திய தலைமகன்…

Monday, November 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மனைவியோடு சேர்ந்து கொண்டு பெற்றத் தாயையே தீ வைத்து கொளுத்திய தலைமகன்…

 

உத்திரப் பிரேதேசத்தின் ஜலாலாபாத் எனும் பகுதியில் பெற்ற தாயையே அவரது மகன் தீ வைத்து கொளுத்திய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவத்தால் தாக்கப்பட்ட அப்பெண்மணி தற்போது மருத்துவமனையில் கவலை கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

ஆகாஷ் குப்தா என்பவர் தன்னுடைய மனைவி தீப் ஷிகா மற்றும் மாமியாருடன் சேர்ந்து கொண்டு குடும்பத் தகராறு காரணமாக பெற்றத் தாயையே தீ வைத்து கொளுத்தி இருக்கிறார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரத்னா தேவி(58) தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தீப் ஷிகாவின் குடும்பத்திற்கும் ரத்னா தேவிக்கும் இடையில் ஏற்கனவே குடும்பத் தகராறு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் மாமியாரின் குடும்பத்தோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு அவரது மகனான ஆகாஷ் குமார் தாயை தீ வைத்து கொல்ல முயற்சித்து இருக்கிறார். ஆனால் சூடு பொறுக்க முடியாமல் தவித்த ரத்னா தேவியின் அலறைக் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு உள்ளனர். இச்சம்பவத்தால் தற்போது ஆகாஷ் குமார் மற்றும் அவருடைய மாமியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.