close
Choose your channels

தோழியின் கணவருடன் கள்ளக்காதல்: சென்னையில் நடந்த விபரீதம்!

Wednesday, December 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தோழியின் கணவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் பெரும் விபரீதம் ஏற்பட்டுள்ளது

சென்னையை சேர்ந்த முனியம்மாள் மற்றும் பிரியா ஆகிய இருவரும் நல்ல தோழிகளாக இருந்தனர். இதனை அடுத்து முனியம்மாள் வீட்டிற்கு அடிக்கடி பிரியா வந்து கொண்டிருந்தார். அப்போது முனியம்மாவின் கணவருக்கும் பிரியாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் அதுவே கள்ளக்காதலாக உருவானது

ஒரு கட்டத்தில் தனது கணவருக்கும் தோழிக்கும் கள்ளக்காதல் இருப்பதை அறிந்துகொண்ட முனியம்மாள் ப்ரியாவின் நட்பை முறித்து கொண்டார். கணவரையும் கண்டித்ததால் முனியம்மாவின் கணவர் ப்ரியாவிடம் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்தி கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரியா, முனியம்மாளை கொலை செய்ய திட்டமிட்டார். இந்த நிலையில் முனியம்மாளும் அவரது கணவரும் பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது, அங்கு வந்த பிரியா, முனியம்மாளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முனியம்மாவின் கழுத்தை அறுத்து விட்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த முனியம்மா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தற்போது அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது

இது குறித்து முனியம்மாள் கணவர் செய்த புகாரின் அடிப்படையில் போலீசார் ப்ரியாஅவாஇ கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தோழியின் கணவர் மீது ஏற்பட்ட கள்ளக்காதல் வெறியால் தற்போது பிரியா சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.