பிளாஸ்டிக் கவரில் எச்சில் துப்பி வீடுகளுக்குள் வீசிய மர்ம பெண்: சிசிடிவி வீடியோவால் பரபரப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. கோடிக்கணக்கான பணம் செலவழிப்பது மட்டுமின்றி 24 மணி நேரமும் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், நர்ஸ்கள், காவல்துறையினர், சுகாதாரத்துறை அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்

இந்த நிலையில் ஒரு சிலர் வேண்டுமென்றே கொரோனா வைரஸை மக்களிடம் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த மர்ம பெண் ஒருவர் பிளாஸ்டிக் பைகளில் எச்சில் துப்பி அதை வீடுகளுக்குள் வீசி சென்ற சிசிடிவி வீடியோ காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ராஜஸ்தான் மாநிலம் மாவட்டம் வல்லப்வாடி என்ற பகுதியில் ஒரு மர்மப் பெண் பிளாஸ்டிக் கவர்களில் எச்சில் துப்பி வரிசையாக வீடுகளுக்குள் வீசி எறிந்தது சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைபடுத்த ஏற்பாடு செய்தனர். மேலும் பிளாஸ்டிக் கவர்களில் எச்சில் துப்பி வீடுகளுக்குள் தூக்கி வீசிய மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 

More News

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த ஆந்திர மருத்துவர்: தகனம் செய்ய மக்கள் எதிர்ப்பு

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அப்பாவி மக்களை மட்டுமின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் மற்றும் நர்சுகளையும் தாக்கி வருகிறது.

இந்தியாவுக்கு சுந்தர்பிச்சை கொடுத்த மிகப்பெரிய கொரோனா தடுப்பு நிதி!

கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை தனது தாய்நாடான இந்தியாவுக்கு கொரோனா தடுப்பு நிதியாக ரூ.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 98 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: 1173ஆக உயர்ந்தது

தமிழகத்தில் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில்

கொரோனா வார்டில் பணிபுரியும் தாயை பார்த்த 6 வயது மகள்: ஒரு நெகிழ்ச்சியான வீடியோ

கொரோனா வார்டில் பணிபுரியும் தாயை ஒரு மாதத்திற்கு பின் பார்த்த 6 வயது மகள் பாசத்துடன் ஓடிவந்து கட்டியணைத்து கதறி அழுத காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

இன்னும் எத்தனை கொடுமைகளை பார்க்கணுமோ? சதீஷ் வீடியோவுக்கு நெட்டிசன் கமெண்ட்

சமீபத்தில் திருமணமான நடிகர் சதீஷ் தற்போது கொரோனா விடுமுறையில் வீட்டில் இருந்து வரும் நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சுவாரஸ்யமான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்