close
Choose your channels

தினமும் அடி, உதை… கணவரின் தொல்லை தாங்காமல் கொன்று, கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்த மனைவி!!!

Thursday, September 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தினமும் அடி, உதை… கணவரின் தொல்லை தாங்காமல் கொன்று, கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்த மனைவி!!!

 

ராஜஸ்தான் மாநிலத்தின் இளம்பெண் ஒருவர் கணவருடன் நடந்த வாக்குவாதத்தின்போது கயிற்றைக் கொண்டு அவரது கழுத்தை இறுக்கியிருக்கிறார். எதிர்பாராத விதமாக அவர் இறந்துவிட, பயந்துபோன அந்த இளம்பெண் கணவரது உடலை கட்டிலுக்கு அடியில் 28 மணிநேரமாக மறைத்து வைத்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அம்மாநிலத்தின் சுரு மாவட்டத்தில் உள்ள சங்கத்தல் எனும் கிராமத்தில் வசித்து வந்தவர் நிர்மல் சிங். அவருடைய மனைவி நீரஜ். இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நிர்மல் தினமும் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமையும் இதேபோல நடைபெற்ற சம்பவத்தில் ஆத்திரமடைந்த நீரஜ் ஒரு கயிற்றை எடுத்து கணவரின் கழுத்தை இறுக்கியிருக்கிறார். இந்த விபத்தில் நிர்மல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறார்.

இதனால் பதறிப்போன நீரஜ் என்ன செய்வதென்று தெரியாமல் கட்டிலுக்கு அடியிலேயே மறைத்து வைத்து இருக்கிறார். இப்படியே 28 மணிநேரம் கழிந்திருக்கிறது. அதற்குப்பின் நிர்மலை தேடி அவருடைய அண்ணன் அசோக் சிங் ஜாட் வந்திருக்கிறார். அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் அதிர்ந்து போன அவர் போலீசாருக்குத் தகவல் கொடுத்து இருக்கிறார். நிர்மலின் உடலை மீட்ட போலீசார் நீரஜை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.