கடனை திருப்பி கேட்டவரை தோழியுடன் ஆபாச படம் எடுத்து மிரட்டிய சென்னை பெண் கைது!

  • IndiaGlitz, [Wednesday,April 27 2022]

கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை தோழியுடன் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய சென்னை பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை அயனாபுரம் பகுதியை சேர்ந்த 60 வயது பேராசிரியர் ஒருவர் தனது வீட்டில் குடியிருந்த 40 வயது ராதா என்பவருக்கு 3 லட்ச ரூபாய் கடன் கொடுத்து உள்ளார். அதன்பிறகு சிறுகச்சிறுக 10 லட்சம் வரை கடன் கொடுத்ததாக தெரிகிறது

இந்த நிலையில் ராதா வீட்டை காலி செய்துவிட்ட நிலையில் பேராசிரியருக்கு கொடுத்த கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இது குறித்து பேராசிரியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் திடீரென கடந்த 19ஆம் தேதி பேராசிரியரை தொடர்பு கொண்ட ராதா, என்னுடைய தோழி வீட்டுக்கு வந்தால் உங்கள் பணத்தை முழுவதுமாக திருப்பி கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பி பேராசிரியரும் ராதாவின் தோழி லட்சுமி வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு அவரை வரவேற்று உபசரித்த ராதா, அவருக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளார். குளிர்பானத்தை குடித்தவுடன் பேராசிரியர் மயங்கி விழுந்துள்ளார்.

இதனை அடுத்து தனது தோழியுடன் பேராசிரியரை ஆபாச படம் எடுத்த ராதா மயக்கம் தெளிந்து பேராசிரியர் எழுந்தவுடன் அந்த ஆபாச படத்தை காட்டி மிரட்டியுள்ளார். வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் கடனை திருப்பி கேட்க கூடாது என்றும் அவர் மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து காவல்நிலையத்தில் பேராசிரியர் புகார் செய்ததை அடுத்து ராதா மற்றும் அவரது தோழிகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கொடுத்த கடனை திருப்பி கேட்டவரிடம் ஆபாச படமெடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

டுவிட்டர் ஓனர் எலான் மஸ்க் இடம் கோரிக்கை வைத்த தமிழ் இயக்குனர்!

உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரை 43 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் இடம் இளம் தமிழ் இயக்குனர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தஞ்சை தேர்த்திருவிழாவில் மின்கம்பி உரசி பயங்கர விபத்து: 11 பேர் பரிதாப பலி!

 தஞ்சையில் நடந்த தேர் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் பலியானதாகவும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

எலான் மஸ்க் வாங்கியதால் டுவிட்டரில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை!

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிவிட்டதை அடுத்து டுவிட்டரில் இருந்து தான் விலகுவதாக பிரபல நடிகை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

நடிகர் விமல் மீது மோசடி புகார் அளித்த தயாரிப்பாளர் கைது: மேலும் இருவர் மீது வழக்குப்பதிவு!

நடிகர் விஷால் மீது பணமோசடி புகார் அளித்த 'மன்னார் வகையறா' படத்தின் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் விமல் மீது புகார் அளித்த மேலும் இருவர் மீது 5 பிரிவுகளில்

மனைவிக்கு ஆசையாய் முத்தம் கொடுத்த 'கேஜிஎஃப்' யாஷ்: வைரல் புகைப்படங்கள்!

'கேஜிஎஃப்' நடிகர் யாஷ் தனது மனைவி ராதிகா பண்டிட் அவர்களுக்கு ஆசையாய் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.