close
Choose your channels

கடனை திருப்பி கேட்டவரை தோழியுடன் ஆபாச படம் எடுத்து மிரட்டிய சென்னை பெண் கைது!

Wednesday, April 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை தோழியுடன் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய சென்னை பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை அயனாபுரம் பகுதியை சேர்ந்த 60 வயது பேராசிரியர் ஒருவர் தனது வீட்டில் குடியிருந்த 40 வயது ராதா என்பவருக்கு 3 லட்ச ரூபாய் கடன் கொடுத்து உள்ளார். அதன்பிறகு சிறுகச்சிறுக 10 லட்சம் வரை கடன் கொடுத்ததாக தெரிகிறது

இந்த நிலையில் ராதா வீட்டை காலி செய்துவிட்ட நிலையில் பேராசிரியருக்கு கொடுத்த கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இது குறித்து பேராசிரியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் திடீரென கடந்த 19ஆம் தேதி பேராசிரியரை தொடர்பு கொண்ட ராதா, என்னுடைய தோழி வீட்டுக்கு வந்தால் உங்கள் பணத்தை முழுவதுமாக திருப்பி கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பி பேராசிரியரும் ராதாவின் தோழி லட்சுமி வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு அவரை வரவேற்று உபசரித்த ராதா, அவருக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளார். குளிர்பானத்தை குடித்தவுடன் பேராசிரியர் மயங்கி விழுந்துள்ளார்.

இதனை அடுத்து தனது தோழியுடன் பேராசிரியரை ஆபாச படம் எடுத்த ராதா மயக்கம் தெளிந்து பேராசிரியர் எழுந்தவுடன் அந்த ஆபாச படத்தை காட்டி மிரட்டியுள்ளார். வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் கடனை திருப்பி கேட்க கூடாது என்றும் அவர் மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து காவல்நிலையத்தில் பேராசிரியர் புகார் செய்ததை அடுத்து ராதா மற்றும் அவரது தோழிகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கொடுத்த கடனை திருப்பி கேட்டவரிடம் ஆபாச படமெடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.