close
Choose your channels

டி-20 உலகக்கோப்பை.. அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி..!

Thursday, February 27, 2020 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்தை சந்தித்த இந்திய அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

133 ரன்கள் குவித்த இந்திய அணி, நியூசிலாந்து அணியை 10 ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதில் கேப்டன் சோஃபி தெவைனும் அடங்குவார். இருப்பினும், மேடி கிரீன் (23 பந்துகளில் 24), கேட்டி மார்ட்டின் (28 பந்துகளில் 25), அமெலியா கெர் (ஆட்டமிழக்காமல் 34) ஆகியோர் நியூசிலாந்து அணியை நம்பிக்கையோடு வைத்ததுடன், இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சில பதட்டமான தருணங்களையும் அளித்தது.

12 பந்துகளில் 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பூனம் யாதவ் வீசிய ஓவரில் கெர் 18 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரை ஹெலே ஜென்சன் பேட் செய்தார். முதல் பந்தை பவுண்டரிக்கு அழைத்து சென்றார். கெர் இறுதி பந்தில் பவுண்டரி அடித்தார், கடைசி பந்தில் ஐந்து ரன்கள் எடுத்தார். இருப்பினும், ஷிகா பாண்டே அற்புதமான யார்க்கர் வீசி, இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். முன்னதாக, ஷஃபாலி வர்மா (34 பந்துகளில் 46) மிகுந்த முதிர்ச்சியுடன் பேட் செய்ததால், இந்தியா 133/8 பதிவு செய்தது. மீதமிருந்த வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை, இறுதியில் தடுமாறினர். ராதா யாதவ் கடைசியில் 9 பந்தில் 14 ரன்கள் குவித்தார். நியூசிலாந்தைப் பொறுத்தவரை, ரோஸ்மேரி மெய்ர் (2/27), அமெலியா கெர் (2/21) தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.