மேலும் ஒரு வருஷத்துக்கு வொர்க் பிஃரம் ஹோம்… முக்கிய நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!!

 

கடந்த பிப்ரவரியில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்த நிலையில் கூகுள் நிறுவனம் அதன் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிசெய்யுமாறு அறிவிப்பு வெளியிட்டது. உலகிலேயே பெரிய நிறுவனமான கூகுள் அனைத்து ஊழியர்களையும் வீட்டில் இருந்து பணிசெய்யுமாறு கேட்டுக்கொண்டதால் மற்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து இதே வழிமுறையைப் பின்பற்றின. கூகுள் நிறுவனம் முதலில் வெளியிட்ட அறிவிப்பில் வருகிற டிசம்பர் மாதம் வரை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிசெய்து கொள்ளலாம் எனத் தெரிவித்து இருந்தது.

தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சலில் ஒரு முக்கியத் தகவலை அனுப்பியிருப்பதாக அமெரிக்காவின் வால்ட்ஸ்டீரிட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதில் டிசம்பர் வரை நீடிக்கப்பட்ட வொர்க் பிஃரம் ஹோம் அடுத்த ஆண்டு ஜுன் 30, 2021 வரை தொடரும் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அடுத்த ஒரு ஆண்டிற்கு கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களது வீடுகளிலேயே இருந்து பணியாற்றும் படியான திட்ட அமைப்புகளை வகுப்பதற்கு உதவியாக இருக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

உலகிலுள்ள பெரும்பலான பகுதிகளில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ஊழியர்களை நேரில் அழைக்க பல நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில் கூகுள் வெளியிட்ட அறிவிப்பு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. நோயின் தீவிரத்தன்மை குறையாமல் இருப்பதால் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் சிலர் கருத்துத் தெரிவித்து இருக்கின்றனர். இந்த விதிமுறைகளைத் தற்போது மற்ற நிறுவனங்களும் பின்பற்ற வேண்டி வருமோ என்ற சந்தேகத்தையும் சில நிறுவனங்கள் எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

த்ரிஷா குறித்து திடுக்கிடும் வீடியோவை வெளியிட்ட மீராமிதுன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை மீராமிதுன் அவ்வப்போது திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது தனது டுவிட்டர் மூலம் குற்றம்சாட்டி வருகிறார்.

கஞ்சா கிடைக்காததால் கோபத்தில் கத்தியை விழுங்கிய ஆசாமி!!! அதிர்ச்சித் தகவல்!!!

ஹரியாணா மாநிலத்தில் 28 வயது இளைஞர் ஒருவர் கஞ்சா கிடைக்காமல் விரக்தியில் சமையலறை கத்தியை விழுங்கிய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது: கர்ணன் பர்ஸ்ட்லுக் குறித்து மாரிசெல்வராஜ்   

நடிகர் தனுஷின் பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு அதிகாலையில் இருந்தே சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பிக்பாஸ் ஒப்பந்தம் குறித்து ஓவியாவின் பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் மூலம் உலக தமிழர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ஓவியா திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

தலைமறைவான சூர்யாதேவி மீது மேலும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கடந்த சில வாரங்களாக கொரோனா பரபரப்பையும் மீறி வனிதா விஜயகுமார்-பீட்டர் பால் திருமணம் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியானது என்பதும்