சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்புப் பணியில் தொழிலாளி உயிரிழப்பு

  • IndiaGlitz, [Saturday,June 10 2017]

சில வாரங்களுக்கு முன் சென்னை தியாகராய நகரில் உள்ள பிரம்மாண்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டு தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.. ஒரு நாள் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் கட்டிடம் முழுவதும் சேதமடைந்துவிட்டது. இதையடுத்து சேதமடந்த கட்டிடத்தை இடித்துத் தரைமட்டமாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டு இடிக்கும் பணி சில நாட்களுக்கு முன் தொடங்கியது.
இன்று கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்து ஒன்றில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி சரத் என்பவர் உயிரிழந்திருக்கிறார். அவரது மரணத்துக்கு காரணமான விபத்து என்ன, அது எப்படி நடந்தது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து, கட்டிட இடிப்புப் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
24 மணிநேரத்துக்கு மேல் தீ அணையாமல் எரிந்த விபத்தில் ஒருவர்கூட உயிரழக்காதபோது அதனால் பாதிக்கப்பட்ட கட்டிடத்தை இடிக்கும்போது ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருப்பது சென்னை மக்களை அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.

More News

தினகரன் பின்னால் எம்.எல்.ஏக்கள் செல்வது ஏன்? துக்ளக் ஆசிரியர் விளக்கம்

திஹார் ஜெயிலில் இருந்து ஜாமீன் பெற்று திரும்பி வந்த டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுமார் 30 எம்.எல்.ஏக்கள் சென்றுள்ளதால் தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் பஞ்ச் டயலாக்கை நடைமுறையில் செய்து காட்டிய விஜய்சேதுபதி

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தில் இடம்பெற்ற ஒரு பஞ்ச் டயலாக் 'இன்னைக்கு நிறைய...

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் கோடை வெயில் கடந்த சில மாதங்களாக கொளுத்தி வந்த நிலையில் சமீபத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.

முதல்வர் சந்திப்பு எதிரொலி: அய்யாக்கண்ணுவின் சென்னை போராட்டம் வாபஸ்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் 41 நாட்கள் டெல்லியில் போராட்டம் நடைபெற்ற நிலையில் நேற்று முதல் சென்னையிலும் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடங்கியது.

பிலிம்பேர் விருது : 8 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட கபாலி-தெறி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' ஆகிய இரண்டு படங்களும் பிலிம்பேர் சவுத் விருதுகளுக்கு 8 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது