close
Choose your channels

இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்காதா? அதிர்ச்சி காரணம்!

Wednesday, October 19, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டங்கள் மற்றும் தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. சமீபத்தில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முக்கிய போட்டியான இந்திய - பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் நடக்க இருக்கும் நிலையில் இந்த போட்டி நடைபெற வாய்ப்பில்லை என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் தற்போது அவ்வப்போது கனமழை பெய்து வருவதையடுத்து அக்டோபர் 23ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக மெல்போர்ன் நகரில் அதிக கன மழை பெய்யும் என்றும் வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறும் இந்திய பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்க்கும் நிலையில் இந்த போட்டி மழையால் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.