என் குழந்தை கர்ப்பத்திலேயே கலைந்துவிட்டது: பிரபல பாடகி வருத்தம்!

  • IndiaGlitz, [Sunday,May 15 2022]

எனது குழந்தை கர்ப்பத்திலேயே கலைந்துவிட்டது என உலகப் புகழ் பெற்ற பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நாங்கள் எங்கள் குழந்தையை கர்ப்பத்திலேயே இழந்துவிட்டோம் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என் கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே என் குழந்தை இறந்தது வருத்தமளிக்கிறது. கர்ப்பத்திலேயே குழந்தை இறப்பது என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகுந்த துயரம் மிக்கது. நான் கர்ப்பமாக இருந்த விஷயத்தை மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆர்வத்துடன் இருந்தேன். ஆனால் அதற்குள் இப்படி ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இனி வரும் காலத்தில் அழகான குடும்பத்தை உருவாக்க முயற்சி செய்வோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்

பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் கடந்த ஏப்ரல் 12ம் தேதி கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது கர்ப்பம் கலைந்து விட்டது என்று அவர் வெளியிட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கும் உலக சாதனை செய்த தமிழ்ப்படம்!

கேன்ஸ் திரைப்பட விழா வரும் மே 17ஆம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் இந்த விழாவில் பங்கேற்க ஏஆர் ரகுமான், நயன்தாரா உள்பட பல திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

12 வருடங்களுக்கு பிறகு கமல் படத்தின் விழாவை தொகுத்து வழங்கும் பிரபல தொகுப்பாளினி!

12 வருடங்களுக்கு பின்னர் உலக நாயகன் கமல்ஹாசனின் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி தொகுத்து வழங்க உள்ளார். 

இசையமைப்பாளர் டி.இமான் திருமணம்: மணமகளுடன் புகைப்படம் வைரல்!

பிரபல இசையமைப்பாளர் டி.இமான் தனது மனைவியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்த நிலையில் தற்போது அவர் மறுமணம் செய்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

திருமணம் எப்போது? வெட்கத்துடன் பதில் கூறிய ஷிவாங்கி!

திருமணம் எப்போது என்பது குறித்த கேள்விக்கு வெட்கத்துடன் ஷிவாங்கி கூறிய பதில் தற்போது வைரலாகி வருகிறது .

நடிகை மஞ்சுவாரியர் பாடிய முதல் தமிழ்ப்பாடல்: ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு

பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் முதல் முறையாக ஒரு தமிழ் பாடலை பாடி உள்ளதாக பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்