உலகில் இதுவே முதல்முறை… தஞ்சை மாணவனைப் பார்த்து பிரமித்துப்போன  நாசா!!!

  • IndiaGlitz, [Monday,December 28 2020]

 

தஞ்சையைச் சேர்ந்த இளம் மாணவர் ஒருவர் உருவாக்கிய சாட்டிலைட் மாடல்களைப் பார்த்து நாசா விஞ்ஞானிகளே அதிர்ந்து போயுள்ளனர். காரணம் உலகில் இதுவரை இவ்வளவு எடை குறைந்த சாட்டிலைட்டை வேறுயாரும் உருவக்கியதே இல்லை. இதனால் நாசா ஆய்வு நிறுவனம் தஞ்சை மாணவர் உருவாக்கிய சாட்டிலைட்டுகள் இரண்டையும் ஆய்வுக்காக, அடுத்த மாதம் விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது.

தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் 2 ஆம் ஆண்டு பிடெக் மெக்கட்ரானிக்ஸ் படிக்கும் மாணவர் ரியாஸ்தீன். இவர் அமெரிக்காவின் நாசா ஆய்வு மையத்துடன் இணைந்து தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய Cubes in space எனும் போட்டியில் கலந்து கொண்டார். இந்தப் போட்டிக்காக ரியாஸ் உருவாக்கிய சாட்டிலைட்தான் தற்போது உலக விஞ்ஞானிகளையே பிரமிக்க வைத்திருக்கிறது.

அதாவது ரியாஸ் உருவாக்கி இருக்கும் சாட்டிலைட்டுகள் இரண்டும் உலகிலேயே மிகவும் எடை குறைந்தவை. 33mm உயரம் 33 கிராம் எடை கொண்ட இந்தச் செயற்கைக்கோள்கள் பெம்டோ சாட்டிலைட் பாலி எதரி இமைடு அல்டம் எனப்படும் தெர்மோ பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் செயற்கைக்கோள்களில் 11 சென்சார்கள் வைக்கப்பட்டு அவை 17 பாரா மீட்டர்கள் வரை கண்காணிக்கும் திறனுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

உலகின் மிக எடைக் குறைந்த செயற்கைக்கோள்களை பார்த்து வியந்து போன நாசா அதை பரிசோதித்துப் பார்க்கவும் முடிவெடுத்து உள்ளது. இதனால் ரியாஸ் உருவாக்கிய விஷன் சாட் V1 மற்றும் V2 எனப்படும் 2 சாட்டிலைட்டுகளையும் நாசா அடுத்த மாதம் விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது. இந்நிலையில் உலக விஞ்ஞானிகளையே வியக்க வைத்த தஞ்சை மாணவர் ரியாஸ்க்கு தமிழக முதல்வர் உட்பட பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

பிக்பாஸ் வீட்டில் நாளை முதல் ஃப்ரீஸ் டாஸ்க்: யார் யாருக்கு எந்த பாடல்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களின் உறவினர்கள் போட்டியாளர்களை சந்திக்கும் நிகழ்வுகள் இடம்பெறும் என்பதும் உறவினர்கள் வீட்டின் உள்ளே வரும்போது சம்பந்தப்பட்ட போட்டியாளர்

பூமியில் கிடைக்காத ஒரு பொருளை பரிசாகக் கொடுத்த கணவன்… நெகிழ்ச்சி சம்பவம்!!!

பூமியில் இல்லாத ஒரு பொருள் என்றால் அதற்காக விண்வெளிக்குத்தான் போக வேண்டும்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பு: திரையுலகினர் இரங்கல்!

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 

ஆறடியில் ஒரு கேக் சிலை… மரடோனாவை கவுரவித்த தமிழர்!!!

மறைந்த கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பேக்கரி கடைக்காரர் ஆறடியில் கேக் சிலையை வடிவமைத்து உள்ளார்.

'மாஸ்டர்' ரிலீஸ் எப்போது? திருப்பூர் சுப்பிரமணியம் தகவல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.