கொரோனாவில் கொடிக்கட்டி பறக்கும் உலகப் பணக்காரர்கள்… என்ன காரணம்?

கொரோனா நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் வறுமை, சுகாதாரச் சீர்கேடு, பொருளாதார இழப்பு எனப் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பொதுமக்கள் பலரும் அவதியுற்று வருகின்றனர். ஆனால் இதே சூழலில் உலகப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்து இருக்கும் தகவல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

வறுமை ஒழிப்பை மையமாக வைத்து இயங்கி வரும் சர்வதேச அமைப்பான Oxfam கொரோனா நேரத்தில் உலகப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கிறது எனும் புள்ளிவிவரக் கணக்கை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி உலகின் முன்னணி 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒட்டுமொத்தமாக 700 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 1.5 டிரில்லியன் டாலராக உயர்ந்து உள்ளதாகத் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

இதனால் உலகின் முன்னணி 10 பணக்காரர்கள் குவித்த சொத்து மதிப்பு முந்தைய அளவைவிட 1.3 பில்லியன் டாலர் அதிகரித்து தற்போது இந்திய மதிப்பில் 9 ஆயரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த மதிப்பை பார்த்து பல உலக நாடுகள் திகைத்து வருகின்றன.

இதற்கு மாறாக உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் சுகாதார வசதி ஏற்படடு இருக்கிறது. இதனால் பல நாடுகளில் பொதுமக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் பருநிலை மாற்றம் காரணமாக தினம்தோறும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இத்தகைய காரணங்களால் உலகம் முழுவதும் 21 ஆயிரம் பேர் தினம் தோறும் இறந்துபோவதாகவும் கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. இத்தனை நெருக்கடிக்கு மத்தியில் உலகின் டாப் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்து இருக்கும் தகவல் பலருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

காதலுக்கு பாலினம் தெரியாது… வரலாற்றை மாற்றிய ஓரினச்சேர்க்கை ஜோடி!

காதலுக்கு பாலினம் தேவையே இல்லை, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக இணைந்து இந்தச் சமூகத்தில் வாழ உரிமையுண்டு

விண்ணிற்கு செல்கிறது இசைஞானி இளையராஜாவின் பாடல்!

இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் அவரது மெலடி பாடல்களை கேட்டு மயங்காத மனிதர்களே உலகில் இல்லை என்றும் சொல்லலாம்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இதில் ராஜு டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் பிரியங்கா இரண்டாவது இடத்தை பெற்றார் என்பதும் தெரிந்தது 

விவாகரத்து செய்யும் முன் யோசியுங்கள், அது மரணத்தை விட கொடுமையானது: பிரபல நடிகர்

காதலித்து கைப்பிடித்த மனைவியை விவாகரத்து செய்வது மரணத்தை விட கொடுமையானது என பிரபல நடிகர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நடிகையை கைது செய்ய தடை: இடைக்கால உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்!

பிரபல நடிகையை கைது செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.