உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள்: போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகர் !!!

  • IndiaGlitz, [Saturday,June 06 2020]

 

உலகப் பிரபலங்களில் யார் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் என்ற பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு போப்ஸ் வெளியிட்டுள்ள உலகில் அதிகச் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் 100 பட்டியலில் ஒரே ஒரு இந்தியர் மட்டும் இடம் பெற்றிருக்கிறார். பிரபல பாலிவுட் நட்சத்திரமான அக்ஷய் குமார் இந்தப் பட்டியலில் தற்போது 52 ஆவது இடத்தைப் பிடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் இவர் ஒருவரே இந்தப் பட்டியலில் இடம்பிடித்து இருந்தார். ஆனால் கட்ந்த ஆண்டின் வருமானத்தை விட தற்போது நடிகர் அக்ஷய் குமாரின் சம்பளம் குறைந்து அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். கடந்த ஆண்டு சுமார் 65 மில்லியன் டாலராக இருந்த இவரின் சம்பளம் தற்போது 48.5 மில்லியன் டாலராக குறைந்து இருக்கிறது.

போப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பட்டியலில் அதிகச் சம்பளம் மட்டுமல்ல கொரோனா நிவாரண நிதிக்கு அதிகத் தொகை கொடுத்த இந்தியராகவும் நடிகர் அக்ஷய் குமார் இடம்பெற்று இருக்கிறார். இவர் கொரோனா நிவாரண நிதியாக 4.5 மில்லியன் டாலரை கொடுத்து இருக்கிறார். இந்திய அளவிலும் இந்தத் தொகை மிகவும் அதிகம் என்பதை பலரும் வரவேற்று இருந்தனர். போப்ஸ் பட்டியலில் 590 மில்லியன் டாலரை வருமானத்துடன் கைலி ஜென்னர் முதல் இடத்தில் இருக்கிறார். இவரை அடுத்து முதல் 10 இடத்தில் ராப் பாடகர் கன்யே வெஸ்ட், ரோஜர் பெடரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியனல் மெஸ்ஸி, டைலர் பெர்ரி, நெய்மர், ஹாவர்ட் ஸ்டெர்ன், லெப்ரான் ஜேம்ஸ், ட்வைன் ஜான்சன் ஆகியோர் உள்ளனர். இவர்களைத் தவிர ஹாலிவுட் பிரபலங்கள் வில் ஸ்மித் (69), ஏஞ்சலினா ஜோலி (99), பாப் பாடகர் ரிஹான்னா (60), கேத்தி பெர்ரி (86), ஜெனிபர் லோபஸ் (56) ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

More News

நிறவெறி கொடுமையானது: ஜார்ஜ் ஃபிளாய்டு மரணத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜெர்மனி அதிபர்!!!

அமெரிக்காவில் கடந்த மே 25 ஆம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினரின் பிடியில் சிக்கி உயிரிழந்தார்.

மரத்தாலான கை கழுவும் இயந்திரம்: 9 வயது சிறுவனுக்கு ஜனாதிபதி விருது 

கென்ய நாட்டைச் சேர்ந்த 9 வயது சிறுவன் மரத்தாலான கை கழுவும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்ததற்காக அந்நாட்டின் அதிபரிடமிருந்து விருதைப் பெற்றுள்ளார் 

இளைஞரின் சிறுநீர் பையில் செல்போன் சார்ஜர்: சுய இன்பத்தால் ஏற்பட்ட விளைவு

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் தெரியாமல் செல்போன் சார்ஜரை விழுங்கி விட்டதாகவும் இதனால் தனக்கு தாங்க முடியாத வயிற்று வலி இருப்பதாகவும் கூறி

சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படும் தேதி: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே.

இனிமேல் பணம் இல்லை. ஒருவருடத்திற்கு எந்தத் திட்டத்திற்கும் தொகை ஒதுக்க முடியாது: கைவிரித்த நிதிஅமைச்சகம்!!!

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக மத்தியஅரசு அதிக நிதியை ஒதுக்கிப் பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டது. இதனால் தற்போது நிதி நெருக்கடி நிலைமை ஏற்பட்டு உள்ளது