இந்தியக் கிரிக்கெட் வீரருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு?

இந்தியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக விளையாடி வருபவர் விருத்திமான் சஹா. இவருக்கு ஐபிஎல் தொடர் போட்டியின்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து டெல்லியில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட சஹா கொரோனாவில் இருந்து மீண்டார். தற்போது தனிமையில் இருக்கும்போதே மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் 2021 போட்டி கொரோனா பரவல் காரணமாக இடையில் ஒத்தி வைக்கப்பட்டது. அதுவும் அணியில் விளையாடி வந்த சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிசிசிஐ உடனடியாக போட்டியை ஒத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கும் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா மற்றும் அமித்துக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது.

அதோடு பெரும் அதிர்ச்சியாக ராஜஸ்தான் அணியின் ஸ்பின்னர் விவேக் யாதவ் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்ட விருத்திமான் சஹாவுக்கு தனிமையில் இருக்கும்போதே மீண்டும் அறிகுறியின்றி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசிஐ டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சஹா இடம்பெற்று உள்ளார். இந்தப் போட்டிக்காக இந்திய வீரர்கள் வரும் ஜுன் 2 ஆம் தேதி இங்கிலாந்து செல்லவுள்ளனர். இந்தப் போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் இங்கிலாந்துடன் மேலும் 5 போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்நிலையில் சஹாவிற்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே அவர் அனுமதிக்கப்படுவார் எனக் கருத்துக் கூறப்படுகிறது.

More News

ஜாக்குலின் நடித்து வரும் 'தேன்மொழி' சீரியல் நடிகர் காலமானார்: விஜய் டிவி இரங்கல்

கலக்கப்போவது யாரு உள்பட ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' உட்பட ஒரு சில படங்களில் நடித்தவருமான ஜாக்குலின் தற்போது விஜய் டிவியில்

அரசியலை தூக்கி எறிந்து விட்டு கலைப்பயணத்தை தொடருங்கள்: கமலுக்கு அட்வைஸ் செய்த இயக்குனர்!

அரசியலை தூக்கி எறிந்துவிட்டு கலைப் பயணத்தை தொடருங்கள் என கமல்ஹாசனுக்கு தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் டுவிட்டரில் அட்வைஸ் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வேற லெவல் கிளாமரில் 'சித்தி 2' சீரியல் நடிகை: வைரல் புகைப்படங்கள்!

ராதிகா நடித்த 'சித்தி' சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 'சித்தி 2' சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில்

தனியார் ஆம்புலன்ஸ்-களுக்கு கட்டணம் இவ்வளவுதான்....! தமிழக அரசு அறிவிப்பு...!

சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்சுகளுக்கான, கட்டணத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஸ்புட்னிக் வி எப்போது கிடைக்கும்? அதிகாரப்பூர்வத் தகவல்!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அடுத்த வாரம் முதல் ஸ்புட்னிக் வி