கமல் நண்பரின் இணையதளம் திடீர் முடக்கம். காரணம் என்ன?

  • IndiaGlitz, [Wednesday,March 29 2017]

கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவரும் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளம் திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயமோகன் தனது இணையதளத்தில் சமீபத்தில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக ஒருசில கட்டுரைகளை எழுதி இருந்தார். இதன் காரணமாக இந்த இணையதளம் முடக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சமீபத்தில் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியின்போது மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதுகுறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் 'இந்து முல்லாக்கள் உருவாக அனுமதிப்போமா?' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். அந்த கட்டுரையில் பிரணவானந்தா போன்றோர் இந்துமதத்திற்கு எதிராக பேசுபவர்களை ஒடுக்க மதவிரோத தடுப்புச் சட்டத்தை இயற்ற வழிகோலுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜெயமோகனின் இணையதளத்தை முடக்கியுள்ள ஹெக்கர்கள் 'இந்து முல்லாக்கள் உருவாக அனுமதிப்போமா?' என்ற கட்டுரை உள்பட ஒருசில கட்டுரைகளை நீக்க்யுள்ளனர். குறிப்பாக மார்ச் 24ஆம் தேதிக்கு பின்னர் அவர் பதிவு செய்த எந்த கட்டுரையையும் இணையதளத்தில் காணவில்லை. கமலுக்க்கு ஆதரவாக எழுதியதால் எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளம் முடக்கப்பட்டதாக கூறப்படினும் இதுகுறித்து ஜெயமோகன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜெய்-அஞ்சலி காதல் திருமணம் எப்போது?

தமிழ் திரையுலகில் அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பிரசன்னா-சினேகா நட்சத்திர ஜோடி போல் இன்னொரு நட்சத்திர ஜோடியான ஜெய்-அஞ்சலி உருவாகவுள்ளதாக கடந்த சில நாட்களாக வதந்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த வதந்தியை இரு தரப்பினர்களும் மறுக்காததால் இதில் உண்மை இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது...

இலங்கை தமிழர்களுக்கு ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் தமிழக அரசியல்வாதிகள் ஒருசிலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விழாவில் கலந்து கொள்ளும் திட்டத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தார்...

விஜய்சேதுபதி-கே.வி.ஆனந்த் இணைந்த 'கவண்'. திரை முன்னோட்டம்

கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கே.வி.ஆனந்த் அவர்களும், வருடத்தில் மிக அதிக படங்களை ரிலீஸ் செய்யும் முன்னனி நடிகர்களில் ஒருவரான விஜய்சேதுபதியும் முதல்முறையாக இணைந்த 'கவண்' திரைப்படம் வரும் வெள்ளியன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீஸ் ஆகவுள்ளது

பவன் கல்யாண் அடுத்த படத்தில் குவியும் கோலிவுட் நட்சத்திரங்கள்

பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடித்த 'கட்டமராயுடு' திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வசூலை பெற்றது.

ரஜினியை தடுத்தது ஏன்? திருமாவளவன் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை சென்று லைகா நிறுவனத்தின் கலந்து கொள்வதோடு மட்டுமின்றி இலங்கை அதிபரிடம் மீனவர் பிரச்சனை குறித்தும் பேசவிருந்த நிலையில் அவரது பயணத்தை தமிழக அரசியல் தலைவர்கள் சிலபல காரணங்களை கூறி தடுத்துவிட்டனர்.