பாஜகவில் இணைந்த தி கிரேட் காளி… பகிர்ந்து கொண்ட சில வார்த்தைகள்!

  • IndiaGlitz, [Thursday,February 10 2022]

டெல்லியில் மத்திய அமைச்சர் ஜிரேதந்திர சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் மல்யுத்த வீரர் “தி கிரேட் காளி“ தன்னை பாஜக கட்சியில் இணைந்து கொண்டார். இவருக்கு கட்சி உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்கா போன்ற ஒருசில நாடுகளில் மட்டும் பிரபலமாக இருந்துவந்த மல்யுத்த விளையாட்டில் இந்தியா சார்பாக கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை அள்ளிவந்தவர்தான் திலிப் சிங் ராணா. மல்யுத்தத்தில் இவருக்கிருந்த திறமை காரணமாக ரசிகர்கள் இவரை “தி கிரேட் காளி“ என்றே அழைத்து வந்தனர். அந்த அளவிற்கு மல்யுத்தப் போட்டியை வெறியுடன் ஆடும் ஒரு வீரராக திகழ்ந்து வந்தார்.

49 வயதான காளி முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். பின்னர் கடந்த 2000 முதல் தொழில் முறை மல்யுத்த வீரராக மாறினார். இவர் அண்டர்டேக்கர் முதற்கொண்டு பெரிய வீரர்களையும் எளிதாக வீழ்த்திவந்தார். தற்போது சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகிய இவர் இளம் வீரர்களுக்கு மல்யுத்த பயிற்சி வழங்கி வருகிறார். மேலும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் வெளியான ஒருசில சினிமாக்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்துப்சேயி தி கிரேட் காளி, பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் மோடியின் தேசத்துக்கான பணிதான் அவரை சரியான பிரதமராக்குகிறது என்று உணர்கிறேன். அதனால் தேசத்திற்கான அவரது ஆட்சியில் ஏன் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது என்று நினைத்தேன். பாஜகவின் வளர்ச்சி எனும் தேசிய கொள்கையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

More News

ரிபீட்ல பாப்பீங்க - வெங்கட் பிரபுவின் வேற லெவல் டீஸர்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் வெங்கட்பிரபுவின் அடுத்த திரைப்படமான 'மன்மத லீலை' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ

தலைவர் 169' படத்தின் அட்டகாசமான அறிவிப்பு: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'தலைவர் 169'திரைப்படத்தின் அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும்

தனுஷின் இரட்டை வேடம்: 'நானே வருவேன்' படத்தின் மாஸ் ஸ்டில்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தில் புதிய ஸ்டில் வெளியாகியுள்ள நிலையில் இந்த ஸ்டில் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

'எப்.ஐ.ஆர்' ரிலீஸ்: மலேசியா, கத்தர், குவைத் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஷ்ணு விஷால்!

விஷ்ணு விஷாலின் 'எப்.ஐ.ஆர்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்

கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த படத்தின் அப்டேட்!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைபுலி எஸ் தாணு அவர்களின் அடுத்த படத்தின் அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது.