தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு ஏன்? மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எக்ஸ் மற்றும் ஓய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்தது.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, அவரது வீட்டில் எட்டு முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகத்திற்குள் விஜய் எங்கு சென்றாலும் அவருடன் பாதுகாப்பு பிரிவினர் செல்வார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய் ஒரு பெரிய அரசியல் கட்சி தலைவராக உருவாகியுள்ள நிலையில், அவர் விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இதற்கிடையில், அவருக்கு அச்சுறுத்தல் வந்ததாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்ததால் இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments