3 வித்தியாசமான கோணத்தில் இலங்கை போர் பற்றிய தமிழ்ப்படம்

  • IndiaGlitz, [Thursday,March 01 2018]

இலங்கையில் ஒரு பகுதியான 'யாழ்' என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. இலங்கையில் போர் நடக்கும் போது ஆறு முக்கிய கதாபாத்திரங்களுக்குள் என்ன நடக்கின்றது என்பதே இந்த படத்தின் கதை. இந்த படம் மூன்று கதைகளில் ஒரு வித்தியாசமான திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கின்றது.

போர் நடக்கும் சூழலில் தமிழ் மக்கள் அகதிகளாக வெளியேறுகின்றார்கள். அப்போது.. ஒரு கதையில் சிங்கள இராணுவ அதிகாரியான அசோகா (டேனியல் பாலாஜி) புலிகளின் ஒரு முக்கிய பெண் போராளி தலைவி தமிழ் செல்வியை தேடுகின்றான். தமிழ் செல்வி (நீலிமாராணி) யை பிடித்து வைத்து விடுகிறான். இது ஒரு கதை

மற்றொரு கதையில் வினோத் ஊரைவிட்டு போகும் தன் காதலி நிலா (லீமாபாபு) உடன் செல்ல முயற்சிக்கும் போது வழியில் தன் அம்மாவை விட்டுப் பிரிந்து அநாதையாக இருக்கும் குழந்தை அமுதினி (ரக்ஷனா) அவன் பயணத்தை இடை மறிக்கிறது.

மூன்றாவது கதையில் லண்டனில் இருந்து தன் சொந்த ஊருக்கு வரும் யாழினி (மிஷா) போருக்கு முன் தன் காதலனை சந்திக்க அலைகின்றாள்.

போரின் பின்னணியில் நடக்கும் இந்த மூன்று கதைகளும் தமிழ் மக்களின் அவலங்களை இரண்டு மணி நேரத்தில், முன்னுக்கும் பின்னுக்குமாக திரைக்கதை அமைத்து தமிழ் மக்களின் போராட்டக் களத்தை வெளிப்படுத்துகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் தமிழ் ரசிகர்களை ஈழ மண்ணிற்கு இரண்டு மணி நேரம் கொண்டு செல்கின்ற முதல் ஈழத்தமிழ் திரைப்படம். முழுக்கதையும், கதாபாத்திரங்களும், பாடல்களும், கதை வசனமும் ஈழத்தமிழில் உள்ளது. தமிழ், ஈழத்தமிழ் உணர்வு மிக்க படம் விரைவில் வெளியாகவுள்ளது

வினோத் கிஷன், டேனியல் பாலாஜி, சசிகுமார் சுப்பிரமனி, மிஷா கோஷல், லீமா ரணி, லீமா பாபு மற்றும் பேபி ரக்ஷனா மற்றும் பலர் நடித்த இந்த படத்தை எம்.எஸ்.ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.

More News

தாயின் கள்ளக்காதலால் பரிதாபமாக பலியான பத்து வயது சிறுவன்

தாய் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் அவருடைய 10 வயது மகன் கொடூரமாக கள்ளக்காதலனால் கொலை செய்யபப்ட்ட சம்பவம் சென்னை நகரையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தக்காளி விலை: விவசாயிகளின் கண்களை போல் சிவந்த ஏரி

தக்காளியின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.100க்கு விற்பனையாகியது. இதனால் பொதுமக்கள் திண்டாடினாலும், தக்காளி விவசாயிகள் நல்ல லாபம் அடைந்தனர்.

'விஸ்வரூபம் 2' டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த 'தூங்காவனம்' படத்திற்கு பின்னர் வேறு படங்கள் வெளியாகாததால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர்.

இரண்டாம் பாக வெற்றி பயணத்தில் இன்றுமுதல் சந்தானம்

சந்தானம் நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படம் 'தில்லுக்கு துட்டு' இந்த படம் ஹிட்டாகிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணையும் இளம் இசைப்புயல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' மற்றும் '2.0' ஆகிய இரண்டு படங்களும் இவ்வருடத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் என்பது தெரிந்ததே.