close
Choose your channels

மகாபலிபுரதிற்கு திடீர் விசிட் அடித்த யாக்கர் மன்னன்… வைரல் புகைப்படம்!

Wednesday, July 7, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட்டின் புது நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருக்கும் தமிழக வீரர் நடராஜன் சமீபத்தில் மகாபலிபுரத்திற்கு சென்றுள்ளார். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சோஷியல் மீடியாவில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது 3 வித போட்டிகளிலும் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு தனது அபாரத் திறமையை வெளிப்படுத்தினார். இதனால் ஒட்டுமொத்த ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியா சார்பாக சர்வதேச போட்டிகளில் ஜொலிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நடராஜன் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போது வெறும் 2 போட்டியில் மட்டுமே விளையாடினார். பின்பு முழங்கால் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி சிகிச்சை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது உடல்நலம் தேறி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்து உள்ள கிரிக்கெட் வீரர் நடராஜன் ஐபிஎல் போட்டிகளுக்காக தயாராகி வருகிறேன் என்றும் கூறியிருக்கிறார். மேலும் சமீபத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவை நேரில் சந்தித்து அவருடன் உரையாடிய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.

அந்த வகையில் தற்போது மகாபலிபுரத்திற்கு திடீர் விசிட் அடித்த நடராஜனின் புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.