close
Choose your channels

விஜய் பாணியில் குட்டிக்கதை கூறி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த 'கேஜிஎப்' யாஷ்!

Friday, April 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் தனது ஒவ்வொரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு குட்டிக்கதையை கூறி வரும் நிலையில் அதே பாணியில் ஒரு குட்டிக்கதையை கூறி ‘கேஜிஎப் 2’ பட வெற்றிக்கு உதவிய அனைத்து ரசிகர்களுக்கும் தனது நன்றியை நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘ஒரு கிராமத்தில் வறட்சி அதிகமாக இருந்ததால் மழைக்காக மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர். அந்த நேரத்தில் எல்லோரும் பிரார்த்தனை கூடத்துக்கு வரும்போது ஒரே ஒரு சிறுவன் மட்டும் குடையுடன் வந்தான். அந்த சிறுவனை பார்த்த அனைவரும் முட்டாள்தனம் என்றும் ஓவர்கான்ஃபிடன்ஸ் என்றும் கூறினார்கள். ஆனால் அந்த சிறுவன் செய்ததற்குப் பெயர்தான் நம்பிக்கை. தன்னம்பிக்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி அடையலாம் என்று கூறினார்.

மேலும் நான் இன்றைக்கு இருக்கும் நிலைக்கு வெறும் நன்றி சொன்னால் மட்டும் போதாது. எனக்கு அன்பை வாரி இறைத்த அனைத்து ரசிகர்களுக்கும் ‘கேஜிஎப்’ டீம் சார்பாக நன்றியை கூறிக்கொள்கிறேன். உங்களுக்கு ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை தரவேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்பினேன். இந்த படத்தை நீங்கள் அனைவரும் பார்த்து மகிழ்ச்சி அடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார். யாஷின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.