close
Choose your channels

யாஷிகாவின் நிலைமை இதுதான்....!அவரின் தாய் உருக்கமான பேட்டி.....!

Monday, July 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை யாஷிகா ஆனந்த் மகாபலிபுரம் அருகே வேகமாக கார் ஓட்டிச் சென்றதில், கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் இவரின் தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். காரில் இருந்த 2 ஆண் நண்பர்கள் உட்பட யாஷிகாவும் பலத்த காயத்திற்கு உள்ளாகி, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாஷிகாவிடம் போலீசார் வாக்கு மூலம் பெற்றதில், அவர்தான் காரை ஓட்டி வந்தது என்பது உறுதியானது. ஆனால் மருத்துவ பரிசோதனையில், யாஷிகா மது அருந்தவில்லை என்று தகவல் கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில் போலீசார் யாஷிகா மீது வேகமாக கார் ஓட்டுதல், உயிர்ச் சேதம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து யாஷிகாவின் தாயார் கூறியிருப்பதாவது,
"யாஷிகா இப்ப நலமுடன் உள்ளார். கால், இடுப்பு, வயிற்றுப்பகுதியில் பலமாக அடி பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது தோழி இறந்த செய்தி, அவருக்கு தெரியாது. ஆனால் அவள் பவானி குறித்து நலம் விசாரித்தபோது, வெண்டிலேட்டர்-ல வச்சரிக்காங்க-னு சொல்லியிருக்கோம். மருத்துவர்கள் இதுகுறித்த பேச வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். இன்னும் 3 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், 2 மாதம் கழித்து தான் நடக்க முடியும் என்றும் மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

2 பேருமே தினமும் சுத்தி பார்க்க போவாங்க, அப்படிதான் வெளிய போய்யிருக்காங்க. என்னோட போன்-அ தான் அவ பிரண்ட் யூஸ் பண்ணிட்டு இருந்தா. என் மொபைல் முழுவதுமா அவ போட்டோஸ் தான் இருக்கு, அவங்கள நினைச்ச அழுகையா வருது என்று தழுதழுத்த குரலில் பேட்டியளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு குறித்து கேட்ட கேள்விகளுக்கு, எனக்கு அதுபற்றி தெரியாது என்று பதில் கூறியுள்ளார்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.