close
Choose your channels

இயற்கை உபாதைகள் படுக்கையிலே தான்....! தன் நிலை குறித்து யாஷிகா பதிவிட்ட போஸ்ட்....!

Tuesday, August 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விபத்திற்கு பிறகு தன்னுடைய நிலை குறித்து யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் மற்றும் கவர்ச்சி போட்டோஷுட்கள் மூலம் பிரபலமானவர் தான் யாஷிகா. அண்மையில் புதுச்சேரியில் காரில் அதிவேகமாகச் சென்றதில், கார் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் 2 ஆண் நண்பர்கள் பலத்த காயமடைந்தனர், அவருடைய நெருங்கிய தோழி வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்தில் 1 மணி நேரம் உயிருக்கு போராடிய நிலையில் காலமானார். விபத்தில் பலத்த காயமடைந்த யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

சமீபத்தில் தான் தோழியின் இறப்பு குறித்து யாஷிகாவிற்கு தெரிய வந்துள்ளது. பவானி குறித்து உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்து யாஷிகா கூறியிருப்பதாவது,
"கால் மற்றும் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் என்னால் நடக்க முடியாது, ஓய்வெடுத்து வருகிறேன். இனி 5 மாதங்களுக்கு என்னால் நிற்கவும், நடக்கவும் முடியாது. படுக்கையிலே தான் இயற்கை உபாதைகள் எல்லாம். இடது புறமும், வலது புறமும் கூட திரும்ப முடியவில்லை. முதுகுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. முகத்தில் எந்த அடியும் படவில்லை. கடவுள் என்னை தண்டித்துள்ளார். கட்டாயமாக இது எனக்கு மறுபிறவியே, ஆனால் நான் இழந்ததை ஒப்பிட்டுப்பார்த்தால், இது ஒன்றுமில்லை என தோன்றுகிறது" என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.