இயற்கை உபாதைகள் படுக்கையிலே தான்....! தன் நிலை குறித்து யாஷிகா பதிவிட்ட போஸ்ட்....!

  • IndiaGlitz, [Tuesday,August 03 2021]

விபத்திற்கு பிறகு தன்னுடைய நிலை குறித்து யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் மற்றும் கவர்ச்சி போட்டோஷுட்கள் மூலம் பிரபலமானவர் தான் யாஷிகா. அண்மையில் புதுச்சேரியில் காரில் அதிவேகமாகச் சென்றதில், கார் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் 2 ஆண் நண்பர்கள் பலத்த காயமடைந்தனர், அவருடைய நெருங்கிய தோழி வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்தில் 1 மணி நேரம் உயிருக்கு போராடிய நிலையில் காலமானார். விபத்தில் பலத்த காயமடைந்த யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

சமீபத்தில் தான் தோழியின் இறப்பு குறித்து யாஷிகாவிற்கு தெரிய வந்துள்ளது. பவானி குறித்து உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்து யாஷிகா கூறியிருப்பதாவது,
கால் மற்றும் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் என்னால் நடக்க முடியாது, ஓய்வெடுத்து வருகிறேன். இனி 5 மாதங்களுக்கு என்னால் நிற்கவும், நடக்கவும் முடியாது. படுக்கையிலே தான் இயற்கை உபாதைகள் எல்லாம். இடது புறமும், வலது புறமும் கூட திரும்ப முடியவில்லை. முதுகுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. முகத்தில் எந்த அடியும் படவில்லை. கடவுள் என்னை தண்டித்துள்ளார். கட்டாயமாக இது எனக்கு மறுபிறவியே, ஆனால் நான் இழந்ததை ஒப்பிட்டுப்பார்த்தால், இது ஒன்றுமில்லை என தோன்றுகிறது என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

 

More News

ரீல் ஜோடி டூ ரியல் ஜோடி.....! பிரபல சீரியல் நடிகையின் திருமணம் குறித்த அப்டேட்....!

பிரபல சீரியல் நடிகையான ரேஷ்மா முரளிதரன் தன்னுடைய திருமணம் குறித்த அப்டேட்டை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவு கொடுத்த மாதவன்: என்ன சொல்லியிருக்கின்றார் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உடலுறவின் போது ஆணுறுப்பு உடைய வாய்ப்புள்ளதா...? காரணம்  என்ன...?

இந்த செய்தி சற்று வியப்பைத் தந்தாலும், யுனைடெட் கிங்டனின் இதுபோன்ற தகவல் வெளிவந்துள்ளது.

'அச்சமுண்டு அச்சமுண்டு' இயக்குனரின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய தகவல்

பிரசன்னா-சினேகா நடிப்பில் இயக்குனர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'அச்சமுண்டு அச்சமுண்டு'. கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது

'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் தென்னிந்திய பிரபலங்கள்!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிய 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது