close
Choose your channels

இந்தியாவின் பெருமையை உயர்த்திய விவசாயி மகன்: இஸ்ரோ சிவன் குறித்து பிரபல நடிகை

Saturday, September 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இஸ்ரோவின் தலைவரும் தமிழருமான சிவன் அவர்கள் தலைமையிலான இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 2, இன்று அதிகாலை நிலவை நெருங்கிய கடைசி நிமிடத்தில் தகவல் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் வெற்றியை நெருங்கிய இஸ்ரோவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக இஸ்ரோ சிவன் அவர்களை கட்டிபிடித்து, தோளில் தட்டிக்கொடுத்து பிரதமர் மோடி ஆறுதல் கூறிய வீடியோ மோடியின் எதிர்ப்பாளர்களை கூட கண்கலங்க வைத்தது.

இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சியை, அர்ப்பணிப்பை கடின உழைப்பை நாடே பாராட்டு வருகிறது. குறிப்பாக பல திரைப்பட நட்சத்திரங்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தங்களது சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகையும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில், இஸ்ரோவை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். உலகின் மற்ற நாடுகளை விட இந்திய விஞ்ஞானிகள் உயர்ந்தவர்கள் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. இந்தியாவின் பெருமையை உலகிற்கே எடுத்துக்காட்டிய விவசாயி மகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்! என்று பதிவு செய்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.