close
Choose your channels

ஐஸ்வர்யாவை குஷிப்படுத்த பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு

Wednesday, September 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று 100வது நாளை எட்டிவிட்ட நிலையில் இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. இதுவரை பதிவான வாக்குகளின்படி ரித்விகாவிற்கு 60 லட்சத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. அவரை அடுத்து ஐஸ்வர்யாவுக்கு 33 லட்சத்திற்கும் மேல் வாக்குகள் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு தினமும் இரண்டு பேர் வந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க முயற்சி செய்து வருகின்றனர். ஐஸ்வர்யா கடந்த இரண்டு நாட்களாக கோபம் இன்றி அமைதியாக இருப்பதால் நிகழ்ச்சியின் விறுவிறுப்பும் குறைந்துவிட்டது.

இந்த நிலையில் இன்று யாஷிகாவை உள்ளே அனுப்பி ஐஸ்வர்யாவை பிக்பாஸ் குஷிப்படுத்தியுள்ளார். வீட்டிற்கு சென்ற பின்னரும் தான் மைக்கை தேடுவது போன்ற பிரமை ஏற்படுவதாக யாஷிகா கூறியதை போட்டியாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதேபோல் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்த இன்னொருவர் பாலாஜி. இவர் தன்னுடைய வீட்டில் நாய் குலைத்தால் கூட பிக்பாஸ் ஞாபகம் வருவதாக கூறுகிறார். மொத்தத்தில் இன்று யாஷிகாவை பார்த்த குஷியில் ஐஸ்வர்யா இருப்பதால் இன்றைய நிகழ்ச்சி இவர்கள் இருவரை சுற்றியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.