close
Choose your channels

யாஷிகா கார் விபத்து: ஆண் நண்பர் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம்!

Friday, July 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது தோழி மற்றும் 2 ஆண் நண்பர்களுடன் மகாபலிபுரத்தில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்த போது அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யார் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பதும் யாஷிகா மற்றும் 2 ஆண் நண்பர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாஷிகா சென்ற கார் விபத்து குறித்து நடந்தது என்ன என்பதை அவருடைய ஆண் நண்பர் நந்தகுமார் என்பவ்சர் காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்ததாக தகவல் வெளிவந்துள்ளது. யாஷிகா ஆனந்த் சென்ற காரில் அவர் பயணம் செய்யவில்லை என்றாலும் விபத்து நடந்த சிலமணி நேரங்களில் செங்கல்பட்டு மருத்துவமனையில் யாஷிகா சிகிச்சை பெற்றபோது அவரை சந்தித்து என்ன நடந்தது என்பதை யாஷிகாவிடம் அவர் கேட்டு தெரிந்து கொண்டதாகவும், அதனை அவர் காவல் துறையிடம் வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

யாஷிகாவின் ஆண் நண்பர் நந்தகுமார் கொடுத்த தகவல்கள் அனைத்தும் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் விபத்து நடந்த ஒரு சில மணி நேரங்களில் யாஷிகாவை இவர் சந்தித்தது மட்டுமின்றி யாஷிகாவின் தோழி பவானியின் இறந்த உடலை செங்கல்பட்டு மருத்துவமனையில் பார்த்து உள்ளதாகவும், அதேபோல் சம்பவம் நடந்த இடத்திற்கும் சென்று பார்த்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. நந்தகுமாரின் வாக்குமூலத்தின் படி விபத்து நடந்ததற்கு காரணம் யாஷிகா ஆனந்த் மிக வேகமாக காரை ஓட்டியது தான் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.