யாஷிகா கார் விபத்து: ஆண் நண்பர் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம்!

  • IndiaGlitz, [Friday,July 30 2021]

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது தோழி மற்றும் 2 ஆண் நண்பர்களுடன் மகாபலிபுரத்தில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்த போது அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யார் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பதும் யாஷிகா மற்றும் 2 ஆண் நண்பர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாஷிகா சென்ற கார் விபத்து குறித்து நடந்தது என்ன என்பதை அவருடைய ஆண் நண்பர் நந்தகுமார் என்பவ்சர் காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்ததாக தகவல் வெளிவந்துள்ளது. யாஷிகா ஆனந்த் சென்ற காரில் அவர் பயணம் செய்யவில்லை என்றாலும் விபத்து நடந்த சிலமணி நேரங்களில் செங்கல்பட்டு மருத்துவமனையில் யாஷிகா சிகிச்சை பெற்றபோது அவரை சந்தித்து என்ன நடந்தது என்பதை யாஷிகாவிடம் அவர் கேட்டு தெரிந்து கொண்டதாகவும், அதனை அவர் காவல் துறையிடம் வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

யாஷிகாவின் ஆண் நண்பர் நந்தகுமார் கொடுத்த தகவல்கள் அனைத்தும் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் விபத்து நடந்த ஒரு சில மணி நேரங்களில் யாஷிகாவை இவர் சந்தித்தது மட்டுமின்றி யாஷிகாவின் தோழி பவானியின் இறந்த உடலை செங்கல்பட்டு மருத்துவமனையில் பார்த்து உள்ளதாகவும், அதேபோல் சம்பவம் நடந்த இடத்திற்கும் சென்று பார்த்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. நந்தகுமாரின் வாக்குமூலத்தின் படி விபத்து நடந்ததற்கு காரணம் யாஷிகா ஆனந்த் மிக வேகமாக காரை ஓட்டியது தான் என்று கூறப்படுகிறது.

More News

ஜார்ஜியாவை அடுத்து மீண்டும் வெளிநாடு பறக்கும் 'பீஸ்ட்' குழுவினர்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் வெளிநாட்டில் நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

'சார்பாட்டா பரம்பரை' படத்தில் நடித்த கே.பாலசந்தர் மருமகள்: ஆச்சரிய தகவல்!

சமீபத்தில் வெளியான பா ரஞ்சித்தின் 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை திரையுலகினர், ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள்

ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்குப்பதிவு செய்த பிரபல நடிகை!

விஜய், பிரபுதேவா உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் ரூபாய் 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

செம ஸ்டைலான மாஸ் கெட்டப்பில் தல தோனி… வைரல் புகைப்படம்!

“கேப்டன் கிங்“ தல தோனி அவர்களுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு.

பார்கவுன்சிலுக்கே சாயம் பூசிய இளம்பெண்… சட்டம் படிக்காமல் ஏமாற்றியது அம்பலம்!

வக்கீல் தொழில் செய்பவர்களிடம் எதையும் மறைக்க முடியாது. தோண்டி துருவி உண்மையைக் கண்டுபிடித்து