close
Choose your channels

யாஷிகாவை கண்கலங்க வைத்த ரசிகர்: அழுதுகொண்டே கொடுத்த போஸ்!

Monday, August 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை யாஷிகாவுக்கு இரத்தத்தால் வரையப்பட்ட பெயிண்டிங் ஒன்றை அவரது ரசிகர் ஒருவர் பரிசாக அளித்த நிலையில் அந்த பரிசை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட யாஷிகா அழுதுகொண்டே கொடுத்த போஸ் வைரலாகி வருகிறது.

நடிகை யாஷிகா கடந்த ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு தனது நண்பர்களுடன் காரில் வந்து கொண்டிருந்த போது அந்த கார் விபத்துக்கு உள்ளாகியது. இந்த விபத்தில் அவரது நெருங்கிய தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகாவுக்கு படு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில மாதங்கள் கழித்து குணமானார்.

இந்த நிலையில் யாஷிகாவின் பிறந்தநாளில் அவரது தீவிர ரசிகர்களில் ஒருவரான ரிங்கோ என்பவர் யாஷிகாவும் அவரது மறைந்த தோழியும் உள்ள பெயிண்டிங் ஒன்றை ரத்தாத்தால் வரைந்து அவருக்கு பரிசாக கொடுத்தார். அந்த புகைப்படத்தைப் பார்த்தவுடன் இன்ப அதிர்ச்சி அடைந்த யாஷிகா அழுது கொண்டே தனது தோழியை பார்த்துக் கொண்டிருந்தார்.

மேலும் அந்த புகைப்படத்துடன் அவர் அந்த ரசிகருக்கு அவர் வரைந்த பெயிண்டிங்கை கையில் வைத்து கொண்டு அழுதுகொண்டே போஸ் கொடுத்த வீடியோ அவரது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் தயவு செய்து யாரும் இதுபோல் ரத்தத்தால் படம் வரைந்து தனக்கு பரிசாக கொடுக்க வேண்டாம் என்றும் தங்கள் அன்பை சாதாரணமாக வெளிக்காட்டினாலேயே போதும் என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.