close
Choose your channels

வாழ்நாள் முழுவதும் இனி இதை செய்ய மாட்டேன்: யாஷிகா எடுத்த சபதம்!

Friday, March 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கி தனது உயிர் தோழியை இழந்த யாஷிகா ஆனந்த், இனிமேல் வாழ்க்கையில் இதனை செய்ய மாட்டேன் என்று சபதம் எடுத்து உள்ளதாக கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த நிலையில் திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்து சிகிச்சைக்கு பின் தற்போது தான் தேறியுள்ளார்.

ஆனால் அவரது உயிர் தோழி இந்த விபத்தில் மரணமடைந்தது அவரை மனதளவில் ரொம்பவே பாதித்துள்ளது. இந்த நிலையில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த யாஷிகா, ‘இனிமேல் கார் மற்றும் பைக் ஓட்ட மாட்டேன் என்று முடிவு செய்திருப்பதாகவும் என்னால்தான் எனது தோழி மரணமடைந்தார் என்று பலர் குற்றம் சாட்டுகிறார்கள் என்றும் அதனால்தான் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடிகை யாஷிகாவிடம் ஒரு ஊதா நிற புல்லட் உள்ளது என்பதும் அந்த புல்லட்டில் அடிக்கடி அவர் வலம் வருவார் என்பதும் தற்போது அந்த புல்லட்டை அவரது அண்ணன் பயன்படுத்தி வருவதாகவும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.