தமிழகத்தில் மஞ்சள் அலர்ட்… சென்னைக்கும் பாதிப்பா???

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தற்போது பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால் இன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்தது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 2017 நவம்பருக்கு பிறகு சென்னையில் குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான சாலைகள் தண்ணீரால் குளம்போல தேங்கியிருப்பதை அடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் மழைநீர் வடிகால் பாதைகளை அடைத்திருப்பதால் தண்ணீர் வெளியே முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கனமழை தொடர்பாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை நீடிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

More News

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பது எப்போது? முதலமைச்சர் விளக்கம் 

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சுறா மீன் தாக்கியதால் கையை இழந்த 12 வயது சிறுவன்! அதிர்ச்சி தகவல்

உக்ரைன் நாட்டில் சுறா மீன் தாக்கியதால் 12 வயது சிறுவன் கையை இழந்ததாகவும், கைடு ஒருவருக்கு கால் சேதமடைந்ததாகவும் வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

ஷிவானிக்கு பதிலாக வைரலாகும் அவரது அம்மாவின் புகைப்படம்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன், நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து பேசாமல் மௌனமாக இருந்தார். அதன் பின்னர் இரண்டாவது வாரம் முதல் ரம்யா, கேப்ரில்லா, சம்யுக்தா

மிரட்டல் விவகாரம்: சீனுராமசாமியின் முக்கிய கோரிக்கை!

பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இன்று காலை திடீரென தனது டுவிட்டர் பக்கத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், முதல்வர் அய்யா தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் பதிவு செய்திருந்தார்.

நிலமோசடி விவகாரம்: சூரியின் அடுத்தகட்ட நடவடிக்கை

சமீபத்தில் நடிகர் சூரி, பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான ரமேஷ் குடவாலா மீது நில மோசடி புகார் கொடுத்தார் என்பதும்