மேலும் ஒரு பாலிவுட் பிரபலத்திற்கு கொரோனா பாசிட்டிவ்! பரபரப்பு தகவல்

இந்தியாவிலேயே அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருப்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் தான். இம்மாநிலத்தில் மட்டும் 47190 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலிவுட் பிரபலங்கள் சிலருக்கும் கொரோன வைரஸ் தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோன வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதன் பின் அவர் சிகிச்சைக்கு பின் குணமாகி வீடு திரும்பினார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமன்றி பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த மூன்று பேர்களுக்கு கொரோன வைரஸ் பாதிப்பு அடைந்ததை அடுத்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் கிரண்குமார் என்பவருக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு கொரோன சோதனை செய்யப்பட்டபோது அவருக்கு பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. இதனை அடுத்து அவர் தனது வீட்டில் உள்ள தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

More News

'சூரரை போற்று' சூர்யாவுக்கு பின்னணி குரல் கொடுத்த இளம் நடிகர்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

ஆட்டோ டிரைவர்களுக்கு உதவிய சூர்யா-கார்த்தி பட ஹீரோயின்

 சூர்யா நடித்த 'மாஸ் என்ற மாசிலாமணி' கார்த்தி நடித்த 'சகுனி' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ப்ரணிதா சுபாஷ்.

நடிகை அனுஷ்கா மீது மனித உரிமை கமிஷனிடம் புகார்: பெரும் பரபரப்பு

பிரபல பாலிவுட் நடிகையும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி மனைவியுமான அனுஷ்கா ஷர்மா மீது மனித உரிமை கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தனக்கு நெருக்கமான முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய மாநில அரசுகள் மீது பாரபட்சமின்றி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்க வேண்டாம்: கவுதம்மேனனுக்கு தமிழ் இயக்குனர் கோரிக்கை

பிரபல இயக்குனர் கவுதம்மேனன் சமீபத்தில் இயக்கிய 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படம் பெரும்பாலானோரால் வரவேற்பை பெற்று இணையதளங்களில் டிரண்ட் ஆகி வருகிறது