விஷாலுக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த யோகிபாபு.. ஹரி படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் நடித்து வரும் ’விஷால் 34’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படப்பிடிப்பின் போது விஷாலுக்கு நடிகர் யோகி பாபு மறக்க முடியாத வித்தியாசமான பரிசளித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’விஷால் 34’. இந்த படத்தின் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடந்து வரும் நிலையில் தற்போது காரைக்குடியில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தில் விஷாலுடன் காமெடி கேரக்டரில் யோகி பாபு நடித்து வரும் நிலையில் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விஷால் உடன் காரில் சென்று கொண்டிருந்த யோகி பாபு திடீரென காரை நிறுத்த சொல்லி அருகில் இருந்த கடையில் முருகன் சிலை ஒன்றை வாங்கி அதை விஷாலுக்கு பரிசளித்தார். முருகன் சிலையுடன் கூடிய புகைப்படத்தை விஷால் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து தனது நண்பர் யோகி பாபு நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் இது தனக்கு மறக்க முடியாத ஒரு பரிசு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆக்ஷன் மற்றும் ஃபேமிலி சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட ‘விஷால் 34’ படத்தில் விஷால் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments