எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: யோகிபாபுவின் மறுப்பு

  • IndiaGlitz, [Wednesday,August 12 2020]

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ஒருசில திரைப்படங்களில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யோகி பாபு மார்க்கெட் உச்சத்தில் இருப்பதை கணக்கில் கொண்டு அவர் நடித்த பழைய படங்களை எல்லாம் தூசி தட்டி ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஒரு சில காட்சிகளில் மட்டுமே யோகி பாபு நடித்திருந்தாலும் அந்த படத்தில் யோகி பாபு முழுவதும் நடித்திருப்பது போன்ற விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யோகி பாபு நடிக்காத ஒரு படத்தில் அவருடைய புகைப்படத்தை வைத்து விளம்பரம் செய்துள்ளதை யோகி பாபு தனது சமூக வலைத்தளத்தில் மறுத்துள்ளார். ‘தெளலத்’ என்ற படம் விரைவில் வெளிவர இருப்பதாக யோகிபாபுவின் புகைப்படத்துடன் இன்று விளம்பரம் வெளிவந்துள்ளது. இது குறித்து கருத்து கூறிய யோகி பாபு ’இன்று இந்த படத்தின் விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

More News

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ் அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டி!!! பரபப்பு நிகழ்வு!!!

அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திவரும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கி பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில்

ஆன்லைனில் வகுப்பில் சிறுவர்கள் படும்பாடு!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

கொரோனா பரவல் காரணமாக இந்தியா உட்பட உலகின் ஒட்டுமொத்த நாடுகளிலும் தற்போது பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கிறது.

விஜய்யின் க்ரீன் இந்தியா சேலஞ்ச்: பாஜக பெண் பிரமுகர் பாராட்டு

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவர்கள் தனது பிறந்தநாளின் போது தனது வீட்டின் தோட்டத்தில் செடிகளை நட்டு, கிரீன் இந்தியா சேலஞ்சை விஜய்க்கு விடுத்தார் என்பதும்

பக்குவப்பட்டவர்கள் பதற்றமுறுவதில்லை; சூர்யா அணுகுமுறை குறித்து வைரமுத்து

சூப்பர் மாடல் அழகி நடிகை ஒருவர், நடிகர் சூர்யா மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து உள்ளார் என்பதும் அந்த விமர்சனத்திற்கு சூர்யா

ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட கர்நாடக மந்திரி… நிவாரணப் பணிகளின்போது பரபரப்பு சம்பவம்!!!

கர்நாடகத்தின் உடுப்பி, தட்சிண கன்னடா, உத்திர கன்னடா போன்ற மாவட்டங