2 வெற்றிப்படங்கள் கொடுத்த இயக்குனரின் அடுத்த படத்தில் யோகிபாபு!

  • IndiaGlitz, [Sunday,September 19 2021]

தொடர்ச்சியாக இரண்டு வெற்றி படங்களை கொடுத்த நடிகர் மற்றும் இயக்குனரின் அடுத்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் யோகிபாபு நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்த ஆர்ஜே பாலாஜி, ‘எல்கேஜி’ என்ற படத்தின் மூலம் நாயகன் மற்றும் இயக்குநராக மாறினார் என்பது தெரிந்தது. இந்த படம் பெற்ற மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தில் நடித்து இயக்கினார். இந்த படமும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பதாய் ஹோ’என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கோவை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

'வீட்ல விசேஷங்க’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக யோகி பாபு தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு, ஆர்ஜே பாலாஜி உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஆர்ஜே பாலாஜி ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ், ஊர்வசி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் எனத் தெரிகிறது.

More News

தாஜ்மஹாலில் தல அஜித்: வைரலாகும் தாறுமாறான புகைப்படங்கள்! 

தாஜ்மஹாலில் தல அஜித் ரசிகர்களுடன் இருக்கும் தாறுமாறான புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

கள்ளக்காதலால் 2 குழந்தைகளை கொன்ற அபிராமியை ஞாபகம் இருக்கா? அவரது தம்பி எடுத்த விபரீத முடிவு!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்த அபிராமியின் சகோதரர் தற்போது எடுத்துள்ள விபரீத முடிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

'புத்தி உண்டா? கேள்வி கேட்ட செய்தியாளரிடம் சீறிய சமந்தா: வைரல் வீடியோ

பிரபல நடிகை சமந்தாவிடம் கேள்வி கேட்ட செய்தியாளரிடம் புத்தி உண்டா? என்று அவர் திருப்பிக் கேட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தாய், தந்தை உள்பட 11 பேர் மீது விஜய் வழக்கு!

தளபதி விஜய் தனது தாய், தந்தை உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுமயாவை நாங்களே கொன்றோம்… பொதுவெளியில் மன்னிப்பு கோரிய அமெரிக்கா!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெற்ற ட்ரோன்