வடிவேலு நடிக்கவிருந்த படத்தில் யோகிபாபு

  • IndiaGlitz, [Wednesday,October 16 2019]

வைகைப்புயல் வடிவேலு நடித்து வந்த ’இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படம் பிரச்சனையின் காரணமாக நின்று போனதை அடுத்து அவருக்கு கோலிவுட் திரையுலகில் வேறு வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் ’சார்லி சாப்ளின் 2’ படத்தை அடுத்து இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கிய ’பேய்மாமா’ என்ற படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமானார். ஆனால் ’இம்சை அரசன்’ படத்தின் பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பில் அவரால் கலந்து கொள்ள முடியாமல் இருந்தது.

இந்த நிலையில் பேய்மாமா படத்தில் வடிவேலு நடக்கவேண்டிய கேரக்டரில் யோகிபாபுவை நடிக்க வைத்து தற்போது சக்தி சிதம்பரம் அந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது குமுளி அருகே நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் யோகிபாபுவுடன் ரேஷ்மா, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

நான் ஒரு ராணி, உலகை எப்படி ஆள்வது என்பது எனக்கு தெரியும்: ஐஸ்வர்யா தத்தா

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற ரித்விகாவை விட இரண்டாமிடம் பெற்ற ஐஸ்வர்யா தத்தாவுக்கு தான் கோலிவுட் திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது 

மோடி, ஜெகன்மோகன் ரெட்டி அரசியல் பாணியில் இருந்து விலகிய கமல்

உலகநாயகன் கமலஹாசன் சமீபத்தில் மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற மக்களவை தேர்தலில்

'விக்ரம் 58' படத்தில் இணைந்த வெற்றிப்பட நாயகி!

சியான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம் 58' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' குறித்த ஹாட் அப்டேட்

சிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கி வரும் ஹீரோ

பிக்பாஸ் சித்தப்புவை சந்தித்த 'வி ஆர் பாய்ஸ்'

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பெண்கள் குறித்து கருத்து கூறிய சரவணன் திடீரென வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே.