50 வருடங்கள் அனுபவம் உள்ள ஒளிப்பதிவாளரிடம் 'சாரி' கேட்ட யோகி பாபு.. காரணம் இதுதான்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இந்திய திரை உலகில் 50 வருடங்கள் ஒளிப்பதிவாளராக அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த கலைஞரிடம் யோகி பாபு சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்டுள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும், அந்த வகையில் அவர் “ஜோரா கைதட்டுங்கள்” என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில் இந்த படம் இம்மாதம் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா நேற்று நடந்த போது அதில் யோகி பாபு கலந்து கொண்டார். அவர் பேசிய போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் மது அம்பாட் குறித்து சில தகவல்களை கூறினார்.
’அவரை யாரும் வயதானவர் என்று நினைத்து விட வேண்டாம். அடுத்ததாக அவர் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். என்னிடம் ஒரு அற்புதமான கதை சொல்லி இருக்கிறார். நானும் அவரும் விரைவில் ஒரு படத்தில் இணையவுள்ளோம்’ என்று கூறினார். அதன் பிறகு, “மது சார், உங்களை கேட்காமலேயே இந்த தகவலை நான் சொல்லி விட்டேன். சாரி,” என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
திரையுலகில் 50 வருட ஒளிப்பதிவாளராக அனுபவம் வாய்ந்த மது அம்பாட் கேரளாவைச் சேர்ந்தவர். மணிரத்னம் இயக்கிய “அஞ்சலி”, கமல்ஹாசன் நடித்த “நம்மவர்” உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும், தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மது அம்பாட் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments