close
Choose your channels

பெண் இயக்குனரின் திருமணத்திற்காக இலவசமாக நடித்தேன்: யோகிபாபு

Monday, October 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யோகி பாபு ஹீரோவாக நடித்த ’பேய் மாமா’ என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு, ‘பெண் இயக்குனர் ஒருவரின் திருமணத்திற்காக தான் இலவசமாக நடித்துக் கொடுத்ததாக கூறியுள்ளார் 

இந்த விழாவில் பேசிய பிரபல இயக்குனர் ஆர்கே செல்வமணி, ‘ஒரு படத்தின் பட்ஜெட்டை பொறுத்து யோகி பாபு சம்பளம் வாங்க வேண்டும் என்றும் மார்க்கெட்டை வைத்து சம்பளம் வாங்க கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார் 

அதன்பின் பேச வந்த யோகி பாபு ’நான் அதிகமாக சம்பளம் வாங்குவது இல்லை என்றும் இயக்குனர் செல்வராகவன் அவர்களிடம் உதவியாளராக இருந்த பெண் இயக்குனர் ஒருவர்  தன்னை அணுகி, தான் ஒரு திரைப்படம் இயக்க விரும்புவதாகவும் உங்களை வைத்து ஒரு கதை எழுதி இருப்பதாகவும் இந்த படம் வெளிவந்தால் தான் தனக்கு திருமணம் என்றும் கூறினார். அவருக்காக அந்த படத்தில் நான் இலவசமாக நடித்துக் கொடுத்தேன்’ என்று கூறினார்.

மேலும் ’நான் ஓரிரு காட்சிகள் நடித்தாலே நான் ஹீரோவாக நடித்தது போல் பில்டப் செய்து விடுகிறார்கள் என்றும் ஆனால் இந்த படத்தில் நான் உண்மையிலேயே ஹீரோவாக நடித்து உள்ளேன் என்றும் அதனால் எனக்கு பயமாக உள்ளது என்றும் யோகிபாபு கூறினார். மேலும் இந்த படம் வடிவேலு அவர்களுக்காக எழுதப்பட்ட கதை என்பதால் நான் நடிக்க தயங்கினேன் என்றும், அவர் பெரிய ஜீனியஸ், அவர் அளவுக்கு என்னால் நடிக்க முடியாது என்று கூறியதாகவும், ஆனால் தனக்காக இயக்குநர் சில காட்சிகளை மாற்றி உள்ளதால் நான் நடிக்க சம்மதித்தேன் என்றும் யோகி பாபு தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.